states

உயிர்ப்பலிகளை அதிகரிக்கும் தாமதம் ஆளுநருக்கு சிபிஎம் கண்டனம்

மசோதாக்கள் தமிழகத்தில் மட்டும் சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்டு ஒப்புதலுக்காக நிற்கின்றன.

சென்னை,நவ.30- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கும்,  உயிர்ப்பலிகளை அதிகரி க்கும் ஆளுநரின் தாமதச் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: நாடு முழுமையும் எதிர்க்கட்சி ஆளும்  மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் நிழல் அரசாங்கங்களை நடத்த ஒன்றிய அரசு முனைந்து வருகிறது. தமிழகத்தில் ஆர்.என்.ரவி, கேரளாவில் ஆரிப் முகமதுகான், தெலுங்கானாவில் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட ஆளு நர்கள் கடைப்பிடிக்கும் போக்கு கள் அரசியல் சாசனத்தை அத்து மீறுபவை. ஒன்றிய பா.ஜ.க அரசின் எதேச்சதிகார செயல்பா ட்டின் ஒரு பகுதியே.  சர்ச்சைக்குரிய பேச்சுக்கள், அரசியல் சாசனம் மீறிய நடவடிக்கைகள், சட்ட மன்றங்களை அவமதிக்கும் வகை யில்  மசோதாக்களை கிடப்பில் போடுவது என ஆளுநர்களின் அத்துமீறல்கள் அமைந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்கள் ஒப்புதல் தரப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியே தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் தரு வதில் தாமதம். தற்போது அவசர சட்ட மும் காலாவதியாகிவிட்டது.  இது உயிர்  குடிக்கும் பிரச்சனை. கடந்த ஓராண்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் 30 உயிர்கள் வரை பலியாகி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. தாமதமாகிற ஒவ்வொரு நாளும், வாரமும், மாதமும் உயிர்களோடு விளையாடுகிற விபரீதமாக உள்ளது. ஆனால் ஆளுநர்  ரவி இதை உணர்ந்தும் ஒன்றிய அரசின் கைப்பாவையாக மட்டும் செயல்படுகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சட்டமன்றம் துவங்கிய முதல் நாளான 2022 அக்டோபர் 17  அன்றே ஆன்லைன் சூதாட்ட தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநருக்கும் அனுப்பப்பட்டது. நவம்பர் 10 வரை பதில்  இல்லை, ஆளுநர் தரப்பில் இருந்து விளக்கமும் கேட்கப்படவில்லை என்று  தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி  தெரி வித்தார். அதற்கு பிறகும் இரண்டு வாரம் ஆளுநர் தரப்பில் அசை வில்லை. ஆளுநரை நேரில் சந்திப்பதற்கும் வாய்ப்பு தரப்பட வில்லை.

கடைசியில் நவம்பர் 24 அன்று ஆளுநர் விளக்கம் கேட்கிறார். “முழுமையான தடை” என்பது சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு முரணானது என்பது ஆளுநர்  கேட்ட விளக்கம். தமிழக அரசு 24 மணி நேரத்திற்குள்ளாக பதில் தந்து விட்டது. இது “பகுதி  தடை” தான்; “தேவையான அளவிற்கே”  தடை விதிக்கப்பட்டுள்ளது; அரசியலமை ப்பு சட்டத்தின் 7 வது அட்டவணை பட்டியல் 2 இல் உள்ள பிரிவுகளின்படியே இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு பதிலளித்துள்ளது. அதற்கு பிறகும் ஆளுநர்  செய்த தாமதத்தால் அவசர சட்டமும் காலாவதியாகிவிட்டது. மக்களின் உயிரோடு விளையாடாமல் தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுநரை வலியுறுத்துகிறது.