states

தமிழ்நாட்டு மக்களிடம் பணிந்தார் ஆளுநர்

சென்னை, ஏப். 10- தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன் லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.  ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத் தொடரில் மீண்டும் நிறைவேற்றப் பட்டது. உடனடியாக மசோதா, தமிழ்நாடு சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அனைத்து விவரங் களும் சரிபார்க்கப்பட்டது. அந்த மசோ தாவும் ஆளுநர் கோரிய விளக்கங் களும்  தமிழ்நாடு சட்டத்துறையின் மூலம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுதில்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, மாலை யில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அப்போது  இந்த மசோதா குறித்து விவாதித்ததாகக் கூறப்பட்டது. அவர் சென்னை திரும்பி யதும் மசோதா குறித்து பரிசீலிக்க  வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப் பட்டது. இரண்டாவது முறை நிறை வேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதா வுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கூறப்படும் நிலையில், அவரது முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

மீண்டும் சர்ச்சை    

அதேநேரத்தில், சில தினங்களுக்கு  முன் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, “ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்பு தல் அளிக்காமல் நிறுத்தி வைக்கிறார் என்றால், அது நிராகரிக்கப்பட்டதாக வே பொருள்” என்று பேசினார். அதும் பெரும் சர்ச்சையையும் விவாதத்தை யும் ஏற்படுத்தியது. இதற்கு திமுக மற்றும்அதன் தோழமை கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிந்தன‘. அதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக் களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய ஒன்றிய அரசையும், குடியரசுத் தலை வரையும் வலியறுத்தும், அரசின் தனித் தீர்மானம் திங்களன்று (ஏப். 10) தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் மீண்டும் நிறை வேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்தச் சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு கால நிர்ணயம்

சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை, ஏப். 10- தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு ஆளுநர் காலம் கடத்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்தும் அவருக்கு ஒன்றிய அரசும் குடியரசுத் தலைவரும் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும் அரசினர் தனித் தீர்மானம் பேரவையில் திங்களன்று (ஏப்.10) நிறைவேற்றப்பட்டது. தீர்மான விவரம் வருமாறு:- தமிழ்நாடு மக்களின் பேராதரவை பெற்று, தமிழ்நாடு ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள அரசுக்கு, தமது மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய அரசமைப்புச் சட்டத்தின் படியான பொறுப்பும், ஜனநா யக ரீதியான கடமையும் உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தச் சட்டமன்ற பேரவைக்கு உள்ள இறையாண்மை மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படியான சட்டம்  இயற்றும் பொறுப்புகளின் அடிப்படை யில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள பல்வேறு மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் அனுமதி அளிக்காமல், காலவரையின்றி கிடப்பில் போட்டு,

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருவதை இப்பேரவை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு சட்டப்பேர வை நிறைவேற்றி அனுப்பிய மசோதா க்கள் குறித்து பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்து கள், அவர் வகிக்கும் பதவி எடுத்துக்  கொண்ட பதவிப்பிரமாணம் ஆகியவற்றுக் கும் மாநிலத்தின் நிர்வாக நலனுக்கும் ஏற்புடையதாக இல்லை என்பதோடு, அரசமைப்புச் சட்டத்திற்கும் கடைப் பிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும் எதி ராகவும் பேரவையின் மாண்பைக் குறைத்து நாடாளுமன்ற ஜனநாய கத்தின், சட்டமன்றத்தின் மேலாண்மை யை சிறுமைப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, மாநில மக்களின் குரலாக  விளங்கும் சட்டமன்றங்களில் நிறை வேற்றி அனுப்பப்படும் மசோதாவிற்கு அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க  குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட வேண்  டும்

என்று ஒன்றிய அரசையும் குடியரசு தலை வரையும் வலியுறுத்துகிறோம். மக்களாட்சித் தத்துவம் மற்றும் மாட்சிமை பொருந்திய இச்சட்டமன்றத்தின் இறை யாண்மை ஆகியவற்றிற்கு களங்கம் விளை விக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாடு  மக்களின் நலனுக்கு எதிராக செயல்படுவதை  தவிர்த்து, தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட மியற்றும் அதிகாரத்தை நிலை நாட்டும் வகை யில், இப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாவிற்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல்  அளிக்க வேண்டுமென ஆளுநருக்கு உரிய  அறிவுரைகளை ஒன்றிய அரசும் குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்க வேண்டும்  என்று பேரவை ஒரு மனதாக வலியுறுத்து கிறது.  இவ்வாறு அந்த தீர்மானத்தில் குறிப்பி டப்பட்டுள்ளது. பாஜக எதிர்ப்பு இந்த தீர்மானத்தை ஆதரித்து காங்கி ரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள்,  மதிமுக, பாமக, மனிதநேய மக்கள் கட்சி, தமி ழர் வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேச கட்சி ஆகிய கட்சி உறுப்பினர்கள் பேசி னர். பாஜக உறுப்பினர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

‘அடிபணிந்தார் ஆளுநர்’

சிபிஎம் கருத்து

ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு நீண்ட கால தாமதத்திற்கு பிறகு  ஒப்புதல் அளித்துள்ளார். இதுவரையிலும் இந்த மசோதா விற்கு ஒப்புதல் அளிக்காமல் அவரை தடுத்தது எது என்ற கேள்வி க்கு அவர் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார். சட்டமன்றத்தை அவமதித்து தமிழக மக்களின் உணர்வு களை காலில்போட்டு மிதித்து பல்வேறு உயிர்கள் பலியான  பிறகு, பல குடும்பங்கள் ஓட்டாண்டி ஆன பிறகு வேறு வழி யில்லாமல் ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ஒப்புதல் அவரின் மனம் உவந்த ஒப்புதல் அல்ல. போராட்டங்கள் மற்றும் சட்டத்தின்படி வேறு வழியில்லாத நிலை ஆகிய காரணங்களால் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.  இப்போதும் கூட அவர் சார்ந்துள்ள  சங் பரிவார் இதை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று குழப்பத்தை விளைவிக்கலாமா என்று முயற்சிக்கக் கூடும். தமிழக மக்கள் அதையும் முறியடிப்பார்கள். ஆளுநர் ரவியை  பகடைக் காயாக்கி தமிழக மக்களின் நலன்களை பணயப்  பொருளாக்கி ஒன்றிய அரசும், பாஜகவும் விளையாடும் விளை யாட்டு இது என்பதை தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள். இனியேனும் தன்னிடம் நிலுவையில் உள்ள மசோதாக்களை அவருக்கு இருக்கும் கடமை களின்படி ஒப்புதல் அளிக்க ஆளுநர் முன்வர வேண்டும். இந்த மசோதா சட்ட வடிவம் பெறுவதற்காக தமிழ்நாடு  அரசு, போராடிய கட்சிகள், இயக்கங்கள், தமிழ்நாட்டு மக்கள், ஊடகங்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தனது பாராட்டுக் களை தெரிவித்துக் கொள்கிறது.

மசோதாவின் சிறப்பு அம்சம் என்ன? 

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் திறமைக்கும் வாய்ப்புக்கும் உள்ள வித்தியாசத்தை வேறுபடுத்தியே இந்த சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.   அதாவது, ஒரு விளையாட்டை நேரில் விளையாடும் போது, அனைத்துச் சூழல்களும் விளையாடுபவருக்குத் தெரியும். ஆனால், ஆன்லைனில் யாரையும் எளிதில் ஏமாற்றி, பணத்தைச் சுரண்டும் வாய்ப்புகள் உள்ளன. அதனடிப்படையில் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றவேண்டிய  தேவை எழுந்தது. பணம் செலுத்தி விளையாடும் அனைத்துவகை ஆன்லைன் விளையாட்டுகளையும் தடைசெய்யும் வகையில் இந்த மசோதாவில் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.