சென்னை, ஜூன் 27- கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களை கொண்டு நிரப்பு வதற்கு செவிலியர்கள் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.சுபின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டியில் 1000 படுக்கை கள் கொண்ட டாக்டர் கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனை தொடங்கப் பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு நிரந்தர தன்மையுடைய செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களை பணி யமர்த்த வேண்டும். மாறாக, பிற மருத்து வமனைகளில் உள்ள செவிலியர்கள், நிரந்தர தன்மையற்ற பணியாளர்களை கொண்டும் நிரப்பப்படும் நடவடிக்கை சரியல்ல. அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், இதை தவிர்க்கவேண்டும். மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் (எம்ஆர்பி) போட்டி தேர்வு மூலம் 2015 ஆம் ஆண்டில் பணியமர்த்தப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களுக்கு 2 வருடத்தில் காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று ஆணை வழங்கப்பட்டது. 8 வருடங்கள் கடந்தும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர பணியிடங்களை உருவாக்கி, பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். திமுக தேர்தல் வாக்குறுதியில் ஒப்பந்த முறை ஒழிக்கப்படும் என்று கூறிவிட்டு டாக்டர் கலைஞர் பெயரில் தொடங்கப்பட்டுள்ள மருத்துவமனை யிலேயே ஒப்பந்த ஊழியர்களை கொண்டு நிரப்புவது ஏற்புடையதல்ல. அரசு மருத்துவமனைக்கு வரு வோரின் எண்ணிக்கையும், மக்களின் மருத்துவ தேவையும் அதிகரித்து வருகிறது. எனவே ஒப்பந்த முறை யில் பணியமர்த்துவது மற்றும் பணி யிடங்களை சரண் செய்வது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.