states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நவ. 25 முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

புதுதில்லி, அக்.26- நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை நவம்பர்  25-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடத்த  ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வித மாக, அரசியலமைப்பு சாசன நாளான ‘நவம்பர் 26’ அன்று  நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தை நடத்த வும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் மன்னிப்புக் கேட்ட யூ டியூபர் 

சென்னை,அக்.26- சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் தனி யார் மருத்துவமனையில் பிர பல யூடியூபர் இர்பான் மனை விக்கு குழந்தை பிறந்தது. அப்போது குழந்தையின் தொப்புள் கொடியை வெட் டும் காட்சியை கேமராவில் பதிவு செய்து அதனை தனது யூடியூப் சேனலில் பதிவு செய்தார். இந்த சம்பவம் தொ டர்பாக இர்பான் மீது நடவ டிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரி வித்திருந்தார். இர்பானிடம் விளக்கம் கேட்டு நோட் டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், இர்பான் கொடுத்த விளக்கக் கடிதத் தில், எந்த உள்நோக்கத்து டன் வீடியோ பதிவு செய்ய வில்லை என்று தெரி வித்துள்ளார்.

ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கு : பாஜக எம்.பி.,க்கு தொடர்பு? 

சென்னை, அக்.26- தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் தங்கக் கட்டிகளை விற்று பணம் கொடுத்தது விசாரணையில் அம்பலமானது. ஹவாலா இடைத்தரகர்கள் மூலம் 20 கிலோ தங்கக் கட்டிகளை புதுச்சேரி பாஜக எம்.பி. செல்வகணபதி விற்றதாக தகவல் தெரிவித்துள்ளார். ரூ.1 கோடி வரை பணப் பரிமாற்றம் செய்து கொடுத்ததாக விசாரணையில் இடைத்தரகர் சூரஜ் ஒப்புக்கொண்டார்  ஹவாலா இடைத்தரகர்கள் என கூறப்பட்ட பங்கஜ், சூரஜ் ஆகியோரிடம் வெள்ளி யன்று 11 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. ரூ.1 கோடி வரை பணப் பரிமாற்றம் செய்து கொடுத்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டார் சூரஜ். விசாரணையில் 4 கோடி ரூபாய் பண பரிமாற்ற விவகாரத்தில் தீபக் லால்வாணிக்கு தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது. புதுச்சேரி எம்பி செல்வகணபதி தன்னை தொடர்பு கொண்டு 20 கிலோ தங்க கட்டிகளை விற்றுத் தருமாறு கூறியதாக மேலும் 5 கிலோ தங்கக் கட்டிகளை புதுச்சேரியில் செல்வகணபதி விற்பனை செய்து விட்டதாகவும் சூரஜ் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தேர்தல் செலவுக்காக தான் தங்க கட்டிகளை விற்றுக் கொடுத்தேன் என்று சூரஜ் ஒப்புக்கொண்டதாக போலீஸ் விசாரணையில் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு பாஜக நிர்வாகி கோவர்தனின் ஓட்டுநர் விக்னேசிடமும், செல்போனில் அடிக்கடி சூரஜ் பேசியது உறுதி செய்யப்பட்டுள்ளது. சூரஜூடன் தொடர்பில் இருந்த மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

நுண்நிதி நிறுவனத்தின் நெருக்கடியால் விசைத்தறித் தொழிலாளி தற்கொலை!

நாமக்கல், அக்.26- நுண்நிதி நிறுவனத்தின் நெருக்கடி யால், விசைத்தறித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட நிலையில், நுண்நிதி நிறுவனத்தின் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் குமாரபாளையம் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யம் அருகே உள்ள வட்டமலை பகுதியை  சேர்ந்தவர் ஞானசேகர். விசைத்தறி கூலித் தொழிலாளியான இவருக்கு ஒரு  மகன், ஒரு மகள் மற்றும் மனைவி உள்ள னர். விசைத்தறி தொழில் சரிவர அமையா ததால், நுண்நிதி நிறுவனங்களிடமிருந்து ஐந்து லட்சம் ரூபாய் கடனாக பெற்று உள்ளார். இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக தவணைத்  தொகையை சரியாக செலுத்த முடிய வில்லை. அதனால், சம்பந்தப்பட்ட 5  நுண்நிதி நிறுவன ஊழியர்களும் ஞான சேகரின் குடும்பத்தினரை தகாத வார்த்தை களில் திட்டியுள்ளனர். மேலும், கடனை உடனடியாக கட்ட வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஞானசேகர், தமிழ்நாடு முதல்வர் மற்றும் ஆட்சியருக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு, வெள்ளியன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில், “நுண்நிதி நிறுவ னங்களிடமிருந்து பெற்ற கடனை திருப்பி  செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்த வர்கள் நெருக்கடி கொடுத்ததால், மன உளைச்சலால் நான் மரணத்தை தேடு கிறேன். எனது குடும்பத்தினரை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்ட குமாரபாளையம் காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, அவரது உற வினர்கள், பிரேத பரிசோதனை செய்யக் கூடாது. தனியார் நுண்நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி, மருத்துவமனை முன்பு போ ராட்டத்தில் ஈடுபட்டனர். குமாரபாளையம் காவல் துறையினர் இவர்களை சமாதா னப்படுத்தி அனுப்பி வைத்தனர்.  சிபிஎம் ஆர்ப்பாட்டம் இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.பெருமாள் தலைமை யில் குமாரபாளையம் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ஞானசேகர் தற்கொலை வழக் கினை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு  அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும். தற்கொலைக்கு காரணமான நுண்நிதி நிறுவன ஊழியர்களை கைது  செய்ய வேண்டும் என வலியுறுத்தி போ ராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர்களிடம் உறுதி  அளித்தனர். இதனையடுத்து அனை வரும் கலைந்து சென்றனர்.