states

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் நவ.15 கனமழை

சென்னை,நவ.10- வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலை யில், தமிழகத்தில் நவம்பர் 15 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள் ளது. இதுதொடர்பாக சென்னை வானி லை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நில விய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உரு வாகக்கூடும். இது அதற்கடுத்த 2  நாட்களில் மேற்கு திசையில், தமிழ கம் - இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக நவம்பர் 12 ஆம் தேதி வரை ஒருசில இடங்களிலும், 13, 14, 15 தேதிகளில் பெரும்பாலான இடங்களி லும், 16 ஆம் தேதி ஒருசில இடங்களிலும் மழை பெய்யக்கூடும். தமிழக கட லோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நவம்பர் 13 ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.