பாஜக-வினருக்கு மஹூவா மொய்த்ரா எம்.பி. பதிலடி
கொல்கத்தா, ஜூலை 7 - பாஜகவினர் என்மீது வழக்கு பதியலாம்; அதற்கெல்லாம் காளி வழிபாட்டாளரான நான் பயப்படமாட்டேன்; ஆணாதிக்க பிராமண மேலாதிக்கத்தை தொடர்ந்து எதிர்ப்பேன் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா கூறியுள்ளார். ஆவணப் பட இயக்குநர் லீனா மணிமேகலை, காளி வேடமணிந்த பெண் ஒருவர் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டரை அண்மை யில் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இப்போது வரை பலர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, “என்னைப் பொறுத்தவரை காளி என்பவர் மது, மாமிசத்தை ஏற்றுக் கொள்ளும் கடவுள்தான்” என்று லீனா மணிமேகலையின் போஸ்டருக்கு ஆதரவான கருத்தை வெளிப் படுத்தினார்.
‘சிக்கிம், பூட்டான் ஆகிய பகுதிகளுக்குச் சென்றால் காளிக்கு மதுவை வழங்குவார்கள். உத்தரப் பிரதேச மாநிலத்தில் சென்று கட வுளுக்குப் பிரசாதமாக மது வழங்க வேண்டும் என்று கூறினால் அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் அதை நிந்தனை என்று கூறி முகம் சுளிப்பார்கள். தங்கள் தெய்வத்தை தாங்கள் விரும்பும் விதத்தில் கற்பனை செய்ய மக்களுக்கு உரிமை உண்டு. அத்துடன் தங்களின் தெய்வத்துக்கு என்ன தர வேண்டும் என்பதையும் பக்தர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றும் அவர் கூறினார். இதனால், லீனா மணிமேகலையைத் தொடர்ந்து, மஹூவா மொய்த்ராவுக்கு எதிராக வும் சங்-பரிவாரங்கள் கிளம்பினர். மஹூவா-வின் கருத்துக்காக அவர்மீது வழக்கு பதிந்து கைதுசெய்ய வேண்டும் என பாஜக-வினர் போராட்டமும் நடத்தினர்.
“மஹூவா மொய்த்ராவின் கருத்துக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று அவர் சார்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒதுங்கிக் கொண்ட நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் போபால் உட்பட நாட்டில் மொத்தம் 6 காவல் நிலையங்களில் மஹூவா மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் பாஜக-வினரின் வழக்கிற்கெல்லாம் அஞ்சமாட்டேன் என்று மஹூவா மொய்த்ரா பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டி ருக்கும் மஹூவா மொய்த்ரா, ``காளி வழிபாட்டா ளரான நான், உங்களிடமிருக்கும் அறிவிலிகள், குண்டர்கள், போலீஸ் மற்றும் உங்கள் அவதூறு கள் என எதற்கும் பயப்பட மாட்டேன். என்மீது பாஜக விரும்பினால் எப்.ஐ.ஆர் பதிவு செய்யட்டும். இந்து மதத்தின் மீது பாஜக-வின் ஒற்றை ஆணாதிக்க பிராமணப் பார்வை மேலோ ங்கும்- மற்ற மதத்தையும் சுற்றி வளைக்கும் இந்தியாவில்- நான் வாழ விரும்பவில்லை. எனவே, நான் இறக்கும் வரை இது போன்று நடக்காமல் பாதுகாப்பேன். அதற்காக எப்ஐ ஆர் பதிவு செய்யுங்கள் - நாட்டிலுள்ள ஒவ்வொரு நீதிமன்றத்திலும் உங்களைச் சந்திக்கிறேன்” என்று மஹூவா மொய்த்ரா கூறியுள்ளார்.