states

தமிழ்நாட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

மதுரை, மே 9-  தமிழ்நாடு முழுவதும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் மே 9 செவ்வாயன்று சோதனை யிட்டனர். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கும் அதன்  துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்பு களுக்கும் ஒன்றிய பாஜக அரசு தடை விதித்துள்ளது.   இதனைத் தொடர்ந்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புல னாய்வு முகமை  அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல்வேறு நிர்வாகிகளை  அழைத்துச் சென்று தொடர்ச்சியாக விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக என்ஐஏ  அதிகாரிகள் தமிழகத்தின் சென்னை, மதுரை, தேனி,  திருச்சி பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில்  மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகியும், முன்னாள் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி யுமான அப்பாஸ் என்பவரது வீட்டில் செவ்வாயன்று அதி காலை முதல் சோதனை நடத்தினர்.  இதே போன்று தெப்பக்குளம் பகுதியில் தமிழன் தெருவி யூசுப் என்பவரது வீடு மற்றும் திருமங்கலம் ஆகிய பகுதிகளி லும் என்ஐஏ அதிகாரிகள் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா  அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்திச்  சென்றனர்.  இதனைத்தொடர்ந்து அப்பாஸ் மற்றும் யூசுப்  ஆகிய இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச்சென்றனர்.சில ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சோதனை நடத்திய போது பாதுகாப்பு கருதி அந்தந்த  பகுதிகளில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவித்து வைக்கப்பட்டிருந்தனர்.