சென்னை, நவ.6- வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தற் போது வரைக்கும் மொத்தம் 26 பேர் பலியாகியுள்ளனர். அவர் களது குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா ரூ.4 லட்சம் நிவா ரணம் வழங்கப்படும். சனிக்கிழமையன்று பெய்த கனமழை யின் காரணமாக 29 கால்நடைகள் பலியாகியுள்ளது. 67 குடிசை கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. 37 மாவட்டங்க ளில் 4.84 மி.மீ. மழை பெய்துள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக 22.92 மி.மீ. பெய்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கு மட்டும் 17 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 43 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கூடுதலாக தலா 2 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர். 121 பன்நோக்கு பாதுகாப்பு மையங்க ளும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. இதுவரை 1070 என்கிற கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக 417 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது. அதில் 268 தொலைபேசி அழைப்புகள் சரிசெய்யப்பட்டுள் ளது. 149 தொலைபேசி அழைப்புகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.