சென்னை, மார்ச் 29- விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கைதிகளின் பற்களை பிடுங்கிய காவல்துறை அதிகாரியின் நிரந்தரமாக பணி நீக்கம் செய்து அவரது பதவியை பறிக்க வேண்டும் என்று பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகை மாலி வலியுறுத்தினார். இது தொடர்பாக பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவர், “திரு நெல்வேலி மாவட்டம், அம்பாசமூத் திரம் காவல் நிலையத்தில் விசா ரணை கைதிகள் பற்களை கொடூர மாக பிடுங்கியுள்ளார் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங். இது அப்பட்டமமான மனித உரிமை மீறல் செயலாகும்”என்றார். இதுவரை தமிழ்நாடு காவல் துறை வரலாற்றில் நடைபெறாத ஒரு கொடூரமான செயலாகும். ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சிபெற்ற அந்த அதிகாரி, இப்போதுதான் வேலைக் கும் சேர்ந்திருக்கிறார். அவர் பதவியில் தொடர்ந்தால் எத்தகைய கொடுமை நடக்கும் என்று எண்ணிப் பார்க்க முடியவில்லை. எனவே, அவ ரது ஐபிஎஸ் பதவியை பறிக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி னார். சட்டத்தை தனது கையில் எடுத்துக்கொண்டு காட்டுமிராண்டி யாக செயல்பட்டிருக்கும் அந்த காவல்துறை அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வது மட்டும் போதாது. அவரை நிரந்தரமாக பணி யில் இருந்து நீக்கம் செய்து கைது செய்யவேண்டும். இதே கருத்தை அதிமுக, காங்கி ரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தி னர்.