states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

சேலம், நவ.2- காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை குறைந்ததன் காரண மாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநா டிக்கு 7 ஆயிரத்து 325 கன  அடியிலிருந்து 6 ஆயிரத்து  712 கன அடியாக குறைந்  துள்ளது. அதேநேரம், காவிரி டெல்டா பாசனத்திற்கு விநா டிக்கு 12 ஆயிரம் கன அடி  விகிதமும், கிழக்கு -  மேற்கு கால்வாய் பாசனத் திற்கு விநாடிக்கு 600 கன அடி விகிதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், அணையின் நீர்மட்டம் 107.88  அடியில் இருந்து 107.50 அடி யாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 74.90  டிஎம்சியாக உள்ளது.

நாகை - இலங்கை கப்பல் சேவை  5 நாட்களாக அதிகரிப்பு

நாகப்பட்டினம், நவ. 2 - கடந்த ஆகஸ்ட் 16 அன்று  நாகை - இலங்கை இடையே சிவகங்கை என்ற நிறுவனம்  பயணிகள் கப்பல் சேவை  தொடங் கியது. வாரத்தில்  செவ்வாய், வியாழன், ஞாயிறு  மூன்று நாட்களுக்கு மட்டு மான இந்த கப்பல் சேவை, பின்னர் சனிக்கிழமை உட்  பட்ட 4 நாட்களாக நீட்டிக்கப்  பட்டது. தற்போது, நவம்  பர் 8 முதல் வெள்ளிக்கிழ மைகளிலும் கப்பல் போக்கு வரத்து சேவை இருக்கும் என ‘சிவகங்கை’ கப்பல் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.

நிலநடுக்கம்

ராஞ்சி, நவ. 2 - ஜார்க்கண்டின் சில பகுதி களில், சனிக்கிழமை (நவ. 2) காலை 9.30 மணியளவில் 3.6 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டது. குந்தி மாவட்டத்தை மையமாகக்  கொண்டு ஏற்பட்ட  இந்த நில நடுக்கத்தின் தாக்கம் சிறிய தாகவே இருந்தது. 

கனடாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம்

புதுதில்லி, நவ.2- காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கனடாவில் கொல்  லப்பட்டதற்கு நரேந்திர மோடி அரசு உதவிய தாக நம்பகமான குற்றச்சாட்டுக்கள் இருப்ப தாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறி இருந்தார்.  இந்த விவகாரம் இரு தரப்பு உறவில் பெரும்  விரிசல் ஏற்பட காரணமாக இருந்தது. ஜஸ்டின்  ட்ரூடோவின் குற்றச்சாட்டை அடுத்து கனடாவில்  உள்ள 41 தூதரக அதிகாரிகளை இந்திய திரும்ப  அழைத்துக்கொண்டது. இந்தியாவில் இருந்த கனடா தூதர்களையும் பதிலடி நடவடிக்கையாக வெளியேற உத்தரவிட்டது. இதனிடையே, கனடாவில் சீக்கிய பிரிவினை வாதிகள் குறிவைக்கப்பட்டதற்கு இந்திய உள்  துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவே கார ணம் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரி கைக்கு தான்தான் கூறினேன் என்று கனடா துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மோரிசன்  தெரிவித்தது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையிலேயே, “நாங்கள் கனடாவின் உயர் தூரதரக அதிகாரியை அழைத்து, கனடா வின் துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மோரிசன் நிலைக்குழுவின் முன்பு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதி ராக தெரிவித்த அபத்தமானதும், ஆதாரமற்றது மான குற்றச்சாட்டுகளுக்கு கடும் கண்ட னத்தைப் பதிவு செய்தோம்” என்று வெளியு றவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில் தெரிவித்துள்ளார்.

கிரீஸ் பிரதமருடன் மோடி பேச்சு

புதுதில்லி, நவ.2- பிரதமர் நரேந்திர மோடியும், கிரீஸ் பிர தமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்-ம் தங்  கள் நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்  மையை மேம்படுத்தும் நோக்கில் தொலை பேசி உரையாடலில் ஈடுபட்டனர்.  இரு தரப்பு வர்த்தக ஒத்துழைப்பில் ஏற்  பட்டுள்ள முன்னேற்றங்களை அவர்கள்  மதிப்பாய்வு செய்தனர். மத்திய தரைக் கடல் பொருளாதார ஒத்துழைப்பு (IMEEC)  மற்றும் மேற்கு ஆசியாவின் முன்னேற் றங்கள் உள்பட பல்வேறு பிராந்திய மற்றும்  சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோ சனை மேற்கொண்டதாகவும் தகவல் வெளி யாகி உள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், “கிரீஸ்  பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன்  ஆக்கப்பூர்வமான தொலைபேசி உரை யாடல் நடந்தது. இந்தியா - கிரீஸ் இடை யேயான கூட்டாண்மையை வலுப்படுத்து வதற்கான எங்கள் பகிரப்பட்ட உறுதிப்  பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தி னோம். வர்த்தகம், பாதுகாப்பு, கப்பல் போக்கு வரத்து மற்றும் இணைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதை நாங் கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் இந்தி யாவின் மதிப்புமிக்க நண்பராக கிரீஸ் உள்  ளது” என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காச நோய் பாதிப்பு 3 விழுக்காடு குறைந்தது!

சென்னை,நவ.2- தமிழகத்தில் நடப்பாண்டு புதி தாக 75,702 பேருக்கு காசநோய்  பாதிப்பு இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. நாட்டில் காச நோயை முழுமை யாக ஒழிக்கும் நோக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சி களை எடுத்து வருகின்றன. 2025 ஆம்  ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. மாநிலம் முழுவதும் காச நோயா ளிகளுக்கு தேவைப்படும் மருந்து கள் களப்பணியாளர்கள் மூலம் வீடு களுக்கே சென்று வழங்கப்படு கின்றன. வீடுகளிலேயே சளி  மாதிரி எடுக்கப்பட்டு, தேவைப்படுப வர்களுக்கு நடமாடும் ‘ஸ்கேன்’ கருவிகள் வீடுகளுக்கு அனுப்பி ‘ஸ்கேன்’ எடுக்கப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால், இந்நோயின் தாக்கத்தால் பாதிக் கப்படுபவர்களில், 84 சதவீதம் பேர் முதல் சிகிச்சையில் குணப்படுத்தப் படுகின்றனர். தொடர் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவர்கள் குண மடைந்து வருகின்றனர். இந்நிலையில், நடப்பாண்டு நாடு முழுவதும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய்  பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட வர்களின் தரவுகளை சுகாதாரத் துறை ஆய்வு செய்தபோது, 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அந்நோய் இருந்தது கண்டறியப் பட்டது. தமிழகத்தில் 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு இருந்தது. அவர்க ளில், தனியார் மருத்துவமனைகளில் 24,685 பேரும், அரசு மருத்துவமனை களில் 50,837 பேரும் முதல் கட்ட  சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்தாண்டு இதே காலகட்டத்தில் தமிழகத்தில் எண்ணிக்கை, 3  விழுக்காடு அதிக மாக இருந்தது குறிப்பிடத்தக்கது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளம்:  ரயில் மோதி  4 தமிழர்கள் பலி 

பாலக்காடு, நவ.2-  பாலக்காடு அருகே ரயில் மோதிய விபத்தில் 4 தமிழக தொழிலாளர்கள் பலியாகி னர். கேரள மாநிலம் பாலக் காடு அருகே சோரனூரில் பாரத புழா ஆற்றின் ரயிலின் மேம்பால தண்டவாளத்தை சுத்தம் செய்யும் பணியில் சனிக்கிழமையன்று தொழி லாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த விரைவு ரயில் மோதிய விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் பலியாகினர்.

கிளாம்பாக்கம் வரும் பயணிகளுக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்

சென்னை, நவ.2- தீபாவளி முடிந்து 4ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கம் வரும் பயணி களுக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. நாடு முழுவதும் தீபஒளி திருநாளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கொண்டா டினர். தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சுமார் 13 லட்சத் துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து பேருந்து, ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இது தவிர பலர் சொந்த கார்களிலும், வாடகை கார்களிலும், மேலும் சிலர் விமானங்களிலும் சென்றனர். தீபாவளிக்கு மறுநாளான வெள்ளிக் கிழமை (நவ. 1) அரசு விடுமுறை அளிக்க ப்பட்டதால், 4 நாள் விடுமுறைக்குப் பின்னர் பெரும்பாலான மக்கள் (திங்கட் கிழமை) அதிகாலை சென்னைக்கு வர திட்டமிட்டு தங்கள் பகுதிகளிலிருந்து ரயில்களிலும், சிறப்பு பேருந்துகளிலும் புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. சென்னை மாநகரின் புறநகர்ப் பகுதி யான கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய  பேருந்து நிலையம் வரை மட்டுமே வெளியூரிலிருந்து வரும் பேருந்துகள் இயக்கப்படும் என்பதால், அங்கிருந்து சென்னையின் வெவ்வேறு பகுதி களுக்கு மக்கள் செல்ல வசதியாக திங்கட்கிழமை (நவ. 4) அதிகாலை முதல் புறநகர் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரம் ரயில் நிலையம் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அரு கிலுள்ள பொத்தேரி ரயில் நிலையத்தில் கூடுதல் நேரம் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டாங்குளத்தூர் ரயில் நிலையத் திலிருந்து திங்கட்கிழமை (நவ. 4) அதி காலை 4 மணிக்கு முதல் ரயில் புறப்படு கிறது. அதனைத் தொடர்ந்து, 4.30, 5.00, 5.45, 6.20 மணிக்கு அடுத்தடுத்து ரயில்கள் புறப்படும் என்று கூறப்பட் டுள்ளது.