states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பீகாரிலும் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

பீகார் மாநிலம் காதிகாம் மாவட்டம் பலராமபூர் பகுதியில் சனிக்கிழமையன்று காலை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டு இருந்தது. அப்போது இந்த ரயில் மீது மர்ம மனி தர்கள் கற்களை வீசினர். இதில் ரயிலின் ஒரு பெட்டியின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை. 

கிறிஸ்தவர்களுக்கு மரியாதை இல்லை: ஒன்றிய அமைச்சர்

“கல்வி மற்றும் ஏழை மக்களுக்கான துறையில் நாங்கள் நிறைய பங்காற்றி உள்ளோம். நாடு  முழுவதும் கிறிஸ்தவ பள்ளிகள் காணப்படுகின்றன. அரசு பள்ளிகள் இல்லாத நாட்டின் தொலைதூர பகுதியில் கூட கிறிஸ்தவ பள்ளிகள் உள்ளன. விடுதலை போராட்ட வீரர்களான நேதாஜி  சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் மகாத்மா காந்தி முதல் அரசியல்வாதிகளான எல்.கே. அத்வானி, அருண் ஜெட்லி, ஸ்மிருதி இரானி, ஜே.பி. நட்டா, பவார் குடும்பத்தினர் மற்றும் திரைப்பட நடிகர் ஷாருக்  கான் வரை அனைவரும் கிறிஸ்தவ பள்ளிகளில் படித்து உள்ளனர். இந்த பள்ளிகள் தவிர, மருத்துவ மனைகள், சுகாதார மையங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் பிற வசதிகள் கொண்ட மையங்களை, தங்களது நிதி கொண்டு கிறிஸ்தவர்கள் நடத்தி வருகின்றனர். இதுபோன்று நாட்டின் வளர்ச்சிக்காக நாங்கள் நிறைய பங்காற்றியும் மரியாதை இல்லை” என்று ஒன்றிய அமைச்சர் ஜான் பர்லா கொல்கத்தாவில் பேசியுள்ளார்.

தலிபான்களும் ஆர்எஸ்எஸ்-சும் ஒன்றுதான்: கார்கே அதிரடி

“ஆப்கனில் பெண்களை படிக்கவிடாமல் தலிபான்கள் எப்படி அழுத்தம் கொடுக்கிறார்கள், அச்சுறுத்துகிறார்கள் என்பதை படித்தேன். இந்தியாவில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வும்  அதையே செய்ய முயற்சிக்கின்றன. மனுஸ்மிருதி அல்லது ஆர்எஸ்எஸ்-ஸில் பெண்களுக்கு இடமில்லை” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். மேலும்,  தேர்தலில்  வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே பாஜகவின் குறிக்கோளாக உள்ளது. மக்கள் நல னுக்காக எதையும் சிந்திக்கவோ செயல்படுத்தவோ இல்லை. 6 காங்கிரஸ் அரசுகளை அவர்கள் திருடிவிட்டனர். மக்கள் காங்கிரஸை தேர்ந்தெடுத்த பிறகு அவர்கள் சதி செய்து எங்கள் கட்சியினரை அழைத்துச் சென்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

ராகுல் யாத்திரையில் ‘பரம் வீர் சக்ரா’ விருது பெற்ற ராணுவ கேப்டன்!

ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்  டத்தில் நடைபெற்ற பாரத் ஜோடோ  யாத்திரையில், பரம்வீர் சக்ரா விருது  பெற்றவரும், இந்திய ராணுவத்தின் முன்னாள் கேப்டனுமான பனா சிங் கலந்து கொண்டுள்ளார். ராகுலு டன் கைகோர்த்தபடி அவர் நடந்து சென்றுள்ளார். யைய்சியாச்சினில் உள்ள பாகிஸ்தான் நிலையை கைப்  பற்றி அங்கு இந்திய மூவர்ணக் கொடி யை நாட்டியதற்காக, இந்தியாவின் உயர்ந்த விருதான ‘பரம் வீர் சக்ரா’  கேப்டன் பனா சிங்கிற்கு வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

உ.பி. முதல்வர் இல்ல பாதுகாப்பு வீரர்  மர்ம மரணம்!

உத்தரப் பிரதேசத்தில் ஆஷி யானா பகுதியில் உள்ள முதல்வர் ஆதித்யநாத் இல்லத்தில் பிரதேச ஆயுத காவல் படை பிரிவை சேர்ந்த  விபின் குமார் (25) என்ற பாதுகாப்பு வீரர் கடந்த ஒரு மாத காலம் பணி யில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் அலி காரி நகரின் கெய்ர் காவல் நிலை யத்திற்கு உட்பட்ட ஆண்டிலா பகுதி யில் வசித்து வந்துள்ளார். இந்நிலை யில், வெள்ளியன்று மாலை பணி  முடிந்து அரசு வாகனத்தில் தனது  முகாமிற்குப் புறப்பட்ட நிலையில், குண்டு காயங்களுடன் மர்மமான முறையில் இறந்துள்ளார். இச்சம்ப வம் கொலையா, தற்கொலையா? என விசாரணை நடந்து வருகிறது. விபின் குமாருக்கு ஒருவாரத்தில் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

டி.ராஜா சகோதரர் மறைவுக்கு  முத்தரசன் இரங்கல்

சென்னை,ஜன.21- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் சகோதரரும், வேலூர் மாவட்டம், சித்தாத்தூர் ஊராட்சியின் முன்னாள் தலைவருமான டி.கண்ணதாசன் (62)  சனிக்கிழமை (ஜன.21) அன்று கால மானார். சித்தாத்தூரில் வசித்து வந்த  துரைசாமி - நாயகம்மாள் குடும்பத்தில்  நான்கு  சகோதரர்கள், ஒரு சகோதரி யுடன் பிறந்தவர் கண்ணதாசன். அவர், சித்தாத்தூரில் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தார். ஊராட்சித் தலைவர், ரோட்டரி சங்கத் தலைவர், கூட்டுறவு வங்கி இயக்குநர் என பல்வேறு  பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி யவர்.  இவருக்கு சித்ரா என்கிற மனைவி யும், கே.கோகுல் என்கிற மகனும், கே.ஆனந்தி என்கிற மகளும் இருக்கிறார்கள்.   அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன்,“ கண்ணதாசனை இழந்து  வாடும் டி. ராஜா உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம்”என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

சென்னை,ஜன.21- தமிழ்நாட்டில் மூன்று நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ள தாக சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:- தமிழ்நாடு கடலோர மாவட்டங் கள்அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதி களில் ஓரிரு இடங்களில் ஞாயிறன்று (ஜன.22) லேசானது முதல் மிதமான  மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்க ளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ்  குறைவாக இருக்கும். தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி காலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. ஜனவரி 23 முதல் 25 ஆம் தேதி வரை, தென் மாவட்டங்கள், டெல்டா அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும்  காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்க ளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கருத்தரங்கம்

 சென்னை,ஜன.21- அரசியல் அமைப்பு சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லையும் என்ற  தலைப்பில் சட்ட கருத்தரங்கம் சென்னை  வேப்பேரி பெரியார் திடலில் நடந்தது. திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ எம்.பி. தலைமை தாங்கினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு, சட்டத் துறை தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா. விடுதலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

விலை குறைந்தது

சென்னை,ஜன.21- சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது.  தற்போது, தங்கம் விலை சவரனுக்கு  ரூ.40 குறைந்துள்ளது. வெள்ளியன்று ஒரு சவரன் ரூ.42,600-க்கு விற்பனையா னது.  இதேபோல வெள்ளி விலையும் சற்று குறைந்திருக்கிறது. ஒரு கிராம் ரூ.74.50-ல் இருந்து ரூ.74.30 ஆக குறைந்துள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தால் மாநில உரிமை பறிபோகும்: கி.வீரமணி 

சென்னை,ஜன.21- ஒன்றிய பாஜக அரசு முயற்சி செய்துவரும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீர மணி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,“மாநிலங்களின் உரிமைகளை பறிக்க, அரசமைப் புச் சட்டத்துக்கு நேர் முரணாக ஒரே  நாடு, ஒரே மொழி, ஒரே கலாச் சாரம், ஒரே மதம், ஒரே ரேசன் கார்டு, ஒரே கல்விதிட்டம் போன்ற  பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது ஒரே நாடு, ஒரே  தேர்தல் என்ற திட்டத்தை கொண்டு வந்து, பல உரிமைகளை பறிக்க ஆழம் பார்க்கின்றனர். இது, இந்தியாவில் தனி நபர் சர்வாதிகார ஆட்சிக்கு அடிக்கல் நாட்டுவதற்கான ஏற்பாடாகும். மேலும், எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற மாநிலங்களின் ஆட்சியை கலைக்க இது ஒரு  குறுக்குவழி முயற்சியாகும். திமுக மீதுள்ள கண்மூடித்தன மான எதிர்ப்பால், அதிமுகவின் ஒரு பிரிவினர் அதற்குஆதரவு தெரிவித்து வருகின்றனர்”என்று கூறியுள்ளார்.

சவால்களைக் கடந்தது வியட்நாம்

ஹோசிமின் சிட்டி, ஜன.21- 2022 ஆம் ஆண்டில் 8.02 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை அடைந்ததன் மூலம், தனது சமூக மற்றும் பொருளாதார மீட்சித்திட்டத்தில் வியட்நாம் வெற்றி பெற்றுள்ளது. கொரோனா பெருந்தொற்று மற்றும் உக்ரைன் நெருக்கடியால் பல்வேறு நாடுகள் பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. அந்நாடுகளின் பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதனால் பாதிப்புகள் எதிர்கொள்ளும் வகையில், சமூக மற்றும் பொருளாதார மீட்சித்திட்டத்தை வியட்நாம் உருவாக்கியது. ஓராண்டு கால அனுபவத்தைப் பார்க்கையில், தனக்கு முன்னால் இருந்த சவால்களை வியட்நாம் வெற்றிகரமாகக் கடந்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவு பெரிய வளர்ச்சியை வியட்நாம் கண்டுள்ளது. வியட்நாமின் பொருளாதாரம் 400 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பைத் தாண்டிவிட்டது. எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே வளர்ச்சி இருந்திருக்கிறது. பணவீக்கமும் 3.15 விழுக்காடாகவே இருந்தது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட பணவீக்கம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கதாகும். விவசாயம், தொழில்துறை மற்றும் சேவைத்துறை ஆகிய மூன்றிலுமே வளர்ச்சி அதிகமாகவே இருந்தது. நெருக்கடியால் பல நாடுகள் உணவுப்பொருட்கள் தட்டுப்பாட்டை சந்தித்ததால், வியட்நாமில் இருந்து உணவுப் பொருட்கள் அந்நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியது. அதேவேளையில், உள்நாட்டிலும் கிராக்கி உருவாகியிருந்ததால், உணவுப் பொருட்கள் உற்பத்தியில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டது. சேவைத்துறையில் சில்லரை வர்த்தகம் நல்ல வளர்ச்சியைக் கண்டது. தொழில் துறையிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.

இந்த ஆண்டின் சர்வதேச கல்வி தினம் ஆப்கன் பெண்களுக்கு அர்ப்பணிப்பு

ஐ.நா.சபை, ஜன.21- ஜனவரி 24 ஆம் தேதி வரும் சர்வ தேச கல்வி தினத்தை ஆப்கன் பெண்க ளுக்கு அர்ப்பணிப்பதாக ஐநாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச் சார அமைப்பான யுனெஸ்கோ அறி வித்துள்ளது. ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கருத்தரங்கில், ஐ.நா. பொதுச் செயலாளரும், ஐநா பொது அவையின் தலைவருமான ஆன்ட னியோ குட்டரெஸ், யுனெஸ்கோ தலைவர் ஆட்ரே அசோலே உள் ளிட்டோர் கலந்து கொண்டு ஆப்கன் பெண்களுக்கு மீண்டும் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவார்கள் என தெரிவிக் கப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ஆட்ரே அசோலே, ‘’உலகில் உள்ள எந்த நாடும் பெண் கள் கல்வி கற்பதை தடுக்கக்கூடாது. கல்வி என்பது சர்வதேச மனித உரிமை. அது கட்டாயம் மதிக்கப்பட வேண்டும். ஆப்கன் பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ள கல்வி உடனடி யாகக் கிடைக்க சர்வதேச சமூகம் பொறுப்பேற்க வேண்டும். பெண்க ளுக்கு எதிரான போர் நிறுத்தப்பட வேண்டும்.’’ என தெரிவித்துள்ளார்.