புதுதில்லி, மே 28- 2021-22 நிதியாண்டிற் கான இந்தியாவின் பொருளா தார வளர்ச்சி 8.8 சதவிகித மாக இருக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது. முன்பு பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 9.1 சத விகிதம் என்று கணித்திருந்த நிலையில், அதைத் தற்போது குறைத்து, 8.8 சதவிகிதமாக மூடிஸ் நிறுவனம் அறிவித் துள்ளது. கச்சா எண்ணெய், உணவு, ரசாயனம் ஆகியவற்றின் விலை உயர்வு, குடும்பங்க ளின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, அவர் களின் செலவினங்களை குறைத்துள்ளது. பணவீக் கத்தை கட்டுப்படுத்த வட்டி உயர்வை அறிவிக்கும் நிலை யில், தேவைகளுக்கான மீட்சி மேலும் தாமதமாகும். இது போன்ற காரணங்க ளால், நடப்பு ஆண்டில், பொரு ளாதார வளர்ச்சியை 9.1 சத விகிதத்திலிருந்து, 8.8 சதவீத மாக குறைத்து கணித்து அறி வித்து உள்ளோம் என்று மூடிஸ் குறிப்பிட்டுள்ளது.
டி.வி., மொபைல் போன், ரெப்ரிஜிரேட்டர் உற்பத்தி குறைப்பு
‘மொபைல்போன், ரெப்ரி ஜிரேட்டர், டிவி’ போன்ற வற்றை தயாரிக்கும் நிறுவ னங்கள், ஜூலை மாதம் வரை யிலான தங்கள் உற்பத்தி இலக்கை குறைத்துள்ளன. கடந்த ஓராண்டில், மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோக சாதனங்கள் விலை 9 முதல் 15 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக விலை அதி கரித்து வருவதை அடுத்து, தேவைகளில் சற்று மந்த நிலை ஏற்படுவதால், இந்நிறு வனங்கள், உற்பத்தியை 10 சதவிகிதம் குறைத்து விட்டன. மொபைல் போனைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட அனைத்து தயாரிப்பாளர் களுமே, தங்கள் உற்பத்தித் திட்டத்தை மாற்றி அமைத் துள்ளனர். மொபைல் போன் களின் விற்பனை, 30 சதவிகி தம் குறைந்துள்ளதாக துறை யினர் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, மொபைல் போன் தயாரிப்பா ளர்கள், தங்கள் உற்பத்தி இலக்கை முன்னர் திட்டமிட்டி ருந்த நிலையிலிருந்து குறைத்துள்ளனர். இப்போது இந்த நிறுவனங்கள், கை வசம் இருப்பதை விற்பதில் தான் முயற்சிகளை மேற் கொண்டுள்ளன. மொபைல் போன்கள் விற்பனை, கடந்த மார்ச் காலாண்டிலிருந்து சரிந்து வருகிறது. இந்நிலை இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் என கருதப்படுகிறது. மேலும் புவிசார் அரசியல் உள்ளிட்ட பிரச்னைகள் ஓர ளவு தீர்ந்து, பண்டிகை காலத் தில் விற்பனை மீண்டும் சூடு பிடிக்கத் துவங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.