எல்எச்பி ரேக்குகள் கொண்ட ரயில்கள்
தற்போதைய நிலை
ஸ்லிப்பர்-7 ஏ,சி. மூன்றடுக்கு-6 ஏ,சி இரண்டடுக்கு-2 முன்பதிவில்லா பெட்டி-5
எதிர்கால நிலை
ஸ்லிப்பர்-2 ஏ,சி. மூன்றடுக்கு-10 ஏ,சி இரண்டடுக்கு-4, முதல்வகுப்பு ஏ.சி.-1 முன்பதிவில்லா பெட்டி-3
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து 8 ஆண்டுகளாக விலை உயர்வு மூலமும் மக்களுக்கான சேவைகளை குறைப்பது, ரத்து செய்வதன் மூலமும் மக்களை வதைத்து வரு கின்றது. இதன் தொடர்ச்சியாக ரயில் பயணத்தின் மீதும் மண்ணை அள்ளிப்போட்டுள்ளது. ரயில் பயணம் இன்று பலருக்கும் விருப்ப மானது, பாதுகாப்பானது என்பது மட்டுமல்ல ‘பட்ஜெட்’ பயணமாகவும் இருக்கிறது.
அரசுப் பேருந்து கட்டணங்களைவிட ரயில் கட்டணம் குறைவாக இருப்பதால் நெடுந்தொலைவு செல்லும் நடுத்தர, ஏழை, எளிய மக்கள் பெரும்பாலும் ரயில்களை நம்பியே உள்ளனர். ஆனால், பயணிகள் மற்றும் சாதாரண ரயில்களை ‘எக்ஸ்பிரஸ்’ ரயில்களாக மாற்றி, மூத்த குடிமக்கள் கட்டணச் சலுகைகள் உட்பட பல்வேறு சலுகைகளை மோடி அரசு பறித்து விட்டது. இதுவும் போதாதென்று தொலைதூர ரயில்களில் இனி ‘குளிர்சாதன வசதி அல்லாத’ ஸ்லீப்பர் பெட்டிகள் இரண்டு மட்டுமே இணைக்கப்படும். மற்ற எல்லா பெட்டிகளும் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய பெட்டிகள்தான் இருக்கும் இந்தப் புதிய திட்டம், தெற்கு ரயில்வேயில், எல்.எச்.பி. (Linke hofmann Busch Coaches) பெட்டிகளைக் கொண்ட, எக்ஸ்பிரஸ் ரயில்களான பாண்டியன், முத்துநகர், மலைக்கோட்டை, சோழன், பொதிகை மற்றும் நீலகிரி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் விரைவில் அறிமுகப் படுத்தப்பட உள்ளது. அதாவது, குளிர்சாதன வசதி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளுக்குப் பதிலாக குளிர்சாதன வசதியுடன் - 3 டயர் பெட்டிகளை தெற்கு ரயில்வே இணைக்கப்போகிறது. இந்த மாற்றத்தினால் இந்த ரயில்கள் அனைத்திலும் குளிர்சாதன வசதி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகள் இரண்டு மட்டுமே இருக்கும். இதனால் பயணிகள் அனைவரும் வேறு வழி யில்லாமல் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய பெட்டிகளிலேயே பயணம் செய்ய வேண்டி யிருக்கும். இதனால், கட்டணங்கள் கடுமையாக அதிகரிக்கும்.
கட்டணம் ரூ.500 அதிகம்
உதாரணமாக, சென்னை - மதுரைக்கு ஸ்லீப்பர் வகுப்பு இருக்கையைவிட ஏசி - 3 டயர் வகுப்பு இருக்கையின் கட்டணம் ரூ. 500 அதிகம். ஸ்லீப்பர் கட்டணம் ரூ. 325, ஏசி 3-ஏ வகுப்புக் கட்டணம் - ரூ. 835. கடந்த ஜூன் 6-ஆம் தேதி தெற்கு ரயில்வே மற்றும் பிற மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் இதுகுறித்த உத்தரவை வழங்கியுள்ளது. ஸ்லீப்பர் பெட்டிகளை, ஏசி (டயர் 1, டயர் 2, டயர் 3) பெட்டிகளாக மாற்றக் கோரியுள்ளது. புதிய திட்டத்தில் இருந்து விதிவிலக்கு பெற விரும்பும் ரயில்களுக்கு, மண்டல ரயில்வேயிடம் விரிவான விளக்கத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரயில்களின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வேகம் தற்போது மணிக்கு 110 கி.மீ. ஆனால், புதிய திட்டப்படி முழுவதும் ஏ.சி. ரயிலாக பெட்டி கள் மாற்றப்பட்டுவிட்டால், குறிப்பிட்ட ரயில்கள் 130 கிமீ வேகத்தில் இயக்கப்படுமாம்.
தெற்கு ரயில்வே போக்குவரத்துக் கிளையின் (பயிற்சி) உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த முறையை நடைமுறைப்படுத்த இதுவரை எந்த ரயிலும் தேர்வு செய்யப்படவில்லை. தேர்ந் தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ள ரயில்களில் சில மாதங்களில் இந்த மாற்றம் கொண்டுவரப்படலாம் என்றும் தெரிவித்தார். இதுபோன்ற நடவடிக்கைகள் ரயில் போக்குவ ரத்தை படிப்படியாக விமான சேவை போன்ற உயர்தர சேவையாக மாற்றுவதாக நாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்கத்தின் செயலாளர் ஜி. அரவிந்த் குமார் கூறினார். கட்டணத்தை உயர்த்தவில்லை என்று ரயில்வே கூறுகிறது, ஆனால் பயணிகள் ரயிலை எக்ஸ்பிரஸ் சேவையாக மாற்றிய பிறகு நாகப்பட்டி னத்திலிருந்து திருச்சிராப்பள்ளி செல்வதற்கான டிக்கெட் 30 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ரயில்வேயை வணிக நிறுவனமாக மாற்றாதே!
நாகப்பட்டினத்திலிருந்து ஐந்து கிமீ தொலை வில் உள்ள சிக்கல் பகுதிக்குச் செல்ல குறைந்த பட்ச கட்டணம் ரூ. 10 ஆக இருந்த நிலையில் இப்போது. ரூ. 30 ஆக உயர்ந்துள்ளது. நாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு ஸ்லீப்பர் வகுப்பு கட்டணம் ரூ. 225. ஏசி 3 டயர் வகுப்புக்கு தற்போது மூன்று மடங்கு (ரூ. 650) செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்’ என்று கூறினார். சென்னை கோட்ட ரயில்வே பயனாளர்களின் ஆலோசனைக்குழு உறுப்பினர் நைனா மாசிலாமணி கூறுகையில், சேவைத் துறையாக இருக்கும் ரயில்வேயை வணிக நிறுவனமாக மாற்றுவது தவறான நடவடிக்கை என்றார். ரயில்வே நிலத்தை குத்தகைக்கு விடுவதன் மூலம் வருவாயை அதிகரிக்கும் திட்டங்களுக்கு என்ன நடந்தது?’ என்று கேள்வி எழுப்பினார். ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஒரு சில பிரிவுகளில் தேவைக்கு ஏற்ப பெட்டிகள் மாற்றியமைக்கப்பட்டு ஏசி மூன்றடுக்கு பெட்டி களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது’. முதலில் குறிப்பிட்ட ரயில்களில் இந்த திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. எனினும், மேற்குறிப்பிட்ட ரயில்கள் அனைத்துமே மக்களின் அடிக்கடிப் பயன்பாட்டில் இருப்பவை என்பதால் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர் என்றார்.