தெலுங்கானா மாநிலம் நிஜாமா பாத்தில் செவ்வாயன்று நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,”அனை வர்க்கும் ஒரு ரகசியத்தை கூறுகிறேன். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜகவின் ஆதரவு தேவைப்பட்ட போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய விரும்பினார். ஆனால் நான் அதை நிரா கரித்தேன்” என்று கூறினார். பாஜகவிற்கு எதிரானவர் என்ற பிம்பத்தை காட்டி வரும் சந்திரசேகர ராவ், பாஜக கூட்டணியில் இணைய விரும்பினார் என்ற மோடியின் இந்த கருத்தால் தெலுங்கானா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மோடியின் கருத்திற்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வின் மகனும் அமைச்சருமான கே.டி.ராம ராவ் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “மோடி திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதத் தொடங்கலாம். சிறந்த கதை ஆசிரியராக அவர் வலம் வரலாம். பிரதமர் கூறும் கதை களுக்கு அவரது நடிப்பிற்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கூட கிடைக்கும். என்டிஏ கூட்டணியில் எங்களை சேர்த்துக் கொள்ள வில்லை என கூறுகிறார். அதில் சேரும் அளவிற்கு எங்களை வெறிநாய் கடித்து விட்டதா ?” என காட்டமாக தெரிவித்தார்.