states

சிதிலமடைந்த கொட்டாம்பட்டி பேருந்து நிலையத்தை நவீனப்படுத்துக!

மதுரை, ஜூன் 8-  பயன்படுத்த இயலாமல் சிதிலமடைந்துள்ள கொட்டாம் பட்டி பேருந்து நிலையத்தை கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நவீனப்படுத்தி தரக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சு.வெங்க டேசன் எம்.பி., நேரில் கோரிக் கை விடுத்தார்.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப் பினர் சு.வெங்கடேசன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடத் தில் உள்ளது கொட்டாம் பட்டி பேருந்து நிலையம். அது கடந்த 10 ஆண்டுகளாக முறை யான பராமரிப்பு ஏதுமின்றி, பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது.  மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந் துள்ளது. மேலும் திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய  மூன்று மாவட்ட எல் லைகள் சந்திக்கின்ற பகு தியாகவும் கொட்டாம்பட்டி இருப்பதனால் தினசரி 100 க்கும் மேற்பட்ட பேருந்துகள் கொட்டாம்பட்டிக்குள் வந்து செல்கின்றன.  பயன்படுத்த இயலாமல் சிதிலமடைந்துள்ள கொட்டாம் பட்டி பேருந்து நிலையத்தி னால் மக்களுக்கும் , பேருந்து போக்குவரத்திற்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே இதன் முக்கியத்துவம் கருதி இப்பகுதியின் கிராம மக்கள் பயன்பெறும் வகை யில் சுமார் 10 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலை யத்தினை நவீனப்படுத்தி தரக் ்கோரி ஜூன் 7 அன்று தமிழக முதல்வரிடம் நேரில் கோரிக் கை வைத்தேன். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளி யாகும் என நம்புகிறேன். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.