states

69 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடரும்

சென்னை, ஏப்.15- தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் 69 விழுக் காடு இட ஒதுக்கீட்டை தொடர்ந்து செயல்படுத்திடவும், பாதுகாத்திடவும் இந்த அரசு உறுதியாக உள்ளது என்று  அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம்  நடைபெற்றது. பின்னர் பதிலளித்து  பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “தமிழ்நாடு சமூக நீதி கொள்கைகளை  நிறுவுவதிலும், அதனை செயல்படுத்து வதிலும் நாட்டிற்கே முன்மாதிரி மாநில மாக திகழ்கிறது”என்றார். மக்கள் தொகையில் பெரும் பகுதி யினரான பிற்படுத்தப்பட்டோர், மிகவும்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மர பினர் வளங்களை அணுகுவதற்கும், வளங்களில் உரிய பங்கை பெற்று  முன்னேறுவதற்கும் இது உறுதுணை யாக உள்ளது என்றும் அவர் கூறினார். சமூக பொருளாதார மற்றும் கல்வி  நிலைகளில் இப்பிரிவு மக்கள் முன் னேற்றம் அடையும் வகையில் அரசு பணிகளில் நியமனம் மற்றும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை ஆகியவற்றிற்கான இடஒதுக்கீடு கொள்கை தமிழ்நாட்டில் 1921 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது,  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 26.5  விழுக்காடும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் களுக்கு 3.5 விழுக்காடு, மிகவும்  பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின ருக்கு 20 விழுக்காடு, ஆதிதிராவிட ருக்கு 18 விழுக்காடு, பழங்குடியின ருக்கு 1 விழுக்காடு என்று 69 விழுக்காடு  இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதை யும் அமைச்சர் விரிவாக சுட்டிக்காட்டி னார். பிறகு அவர் வெளியிட்ட அறிவிப்பு கள் வருமாறு:- பள்ளி மாணவியர் விடுதிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விடுதிகளின் தூய் மைப்பணிகளுக்காகவும், சுகாதா ரத்தை மேம்படுத்துவதற்காகவும் ரூ. 5 கோடி வழங்கப்படும். பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிக ளில் தங்கி பயிலும் 10 மற்றும் 12 ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் வினா -வங்கி வழங்கப்படும். 385 பள்ளி மாணவியர் விடுதிக ளுக்கு 1 கோடியே 56 லட்சத்து 44  ஆயிரம் ரூபாய் செலவில் 111 தொலைக் காட்சி இணைப்புகள் வழங்கப்படும்.  மலை பிரதேசங்களில் செயல்பட்டு வரும் 20 விடுதிகளுக்கு நீர் கொதி கலன் (286) 10 லட்சம் ரூபாய் செலவில்  வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.