சென்னை, நவ. 13- மத்திய உள்துறை அமைச்சரே ஒப்பு க்கொண்டது போல, தொன்மையான தமிழ்மொழிக்கு, இந்திக்கு இணை யாக ஆட்சிமொழித் தகுதி அளித்திட வேண்டும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள் ளார். தமிழ்மொழி மிகவும் தொன்மை யானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த மொழியின் அருமை யைத் தெரிந்து கொள்ளக்கூடிய வகை யில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் தமிழ்வழியில் பாடத் திட்ட ங்களைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ள பொறியியல் பட்டப் படிப்பை முதன்முதலில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில், கலைஞர் 2010-ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தி விட்டார். இந்தியாவிலேயே முதல் மாநில மாக பொறியியல் படிப்பினைத் தாய்மொழியில் கற்க ஏற்பாடு செய்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டட (சிவில்) மற்றும் இயந்திரப் (மெக்கா னிக்கல்) பொறியியல் படிப்புகளைத் தமிழில் அறிமுகம் செய்து, தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட தமிழில் பொறியியல் கல்வி இன்றும் நடை முறையில் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழில் பொறியியல் படிப்பு நடைமுறையில் உள்ளது.
இதன் அடுத்தகட்டமாக, இப்போது 2022-23-ஆம் ஆண்டு முதல் பட்டயப் படிப்புகளிலும் மேற்காண் பாடப் பிரிவுகள் தமிழ்வழியில் அரசு பாலி டெக்னிக் கல்லூரிகளில் தொடங்கப் பட்டுள்ளன. அதற்காகப் பொறியியல் பட்டப் படிப்பிற்கான புத்தகங்கள் தமிழ்வழியில் வெளியிடப்பட்டுள்ளன. மருத்துவப் படிப்பை தமிழில் கற்ப தற்கும் வழி செய்ய இப்போது தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரு கிறது. அதற்காக மூன்று பேராசிரி யர்கள் தலைமையில் குழு அமைக்கப் பட்டு, எம்.பி.பி.எஸ் முதலாமாண்டு பாடப் புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் அன்னைத் தமிழ்மீது காட்டியுள்ள அக்கறையோடு, சமஸ்கிருதத்திற்கு இணையாக உயர் தனிச் செம்மொழியாம் தமிழின் வளர்ச்சி க்கு ஒன்றிய அரசின் நிதியுதவி அளித்தி டவும்; மத்திய உள்துறை அமைச்சரே ஒப்புக் கொண்டிருப்பது போல், தொன்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு உரிய ஆட்சி மொழித் தகுதியை ஒன்றிய அரசு அலுவலகங்களில் அளித்திடவும் தேவையான முயற்சிகளை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கி றேன். குறிப்பாகத் தமிழகத்தில் ஒன்றிய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாயத் தமிழ் பாடத் திட்டத்தை அமல்படுத்தவும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகளாக காலி யாக உள்ள தமிழ்ப் பேராசிரியர் பணி யிடங்களை உடனே நிரப்பித் தர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.