சென்னை,டிச.9- சென்னை உட்பட 5 மாவட்டங்களில் வழக்கம் போல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் ஆனால் பொது மக்கள் பயணத்தை முற்றி லும் தவிர்க்க வேண்டும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கேட்டுக்கொண்டார். மாண்டஸ் புயல் புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக் கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவித்தது. இந்த நேரத்தில் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் வழக்கம் போல் பேருந்துகள் தொடர் ந்து இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரி வித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில்,“சென்னை, செங்கல் பட்டு, காஞ்சிபுரம், திரு வள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் வழக்கம் போல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். பொதுமக்கள் பாது காப்பான முறையில் தங்கள் பயணத்தை மேற்கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். குறிப்பாக, மாண்டஸ் புயல் கரையை கடப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன் பாகவும், பின்பாகவும், கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் பேருந் துகள் இயக்கப்பட மாட்டாது.
மேலும், அந்தந்த மாவட்ட எல்லைகளுக் குட்பட்ட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்கு நர்கள், உயர் அலுவலர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சி யர்கள் மற்றும் காவல் கண் காணிப்பாளர்களுடன் தொடர்பில் இருந்து, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, தகுந்த முன் னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொண்டு, கண்காணிக்க அறிவுறுத் தினார். புயலானது கரையை கடக்கும் நேரத்தில் மட்டும் பொதுமக்கள் பேருந்து பயணத்தை முற்றிலும் தவிர்க்கும்படி அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
புதுவை அரசு பேருந்துகள் ரத்து
மாண்டஸ் புயல் காரண மாக சென்னை வரும் புதுச்சேரி அரசுப் பேருந்துகள் நிறுத்தப் பட்டதாக அம்மாநில அரசு சாலை போக்குவரத்து கழகம் தெரிவித்தது. இத னையடுத்து, கிழக்கு கடற் கரை சாலை வழியாக சென்னை வரும் புதுச்சேரி பேருந்துகள் மற்றும் காரைக் கால் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டது.