states

தீக்கதிர் விரைவு செய்திகள்

உத்தர்காசியில் 3.1 ரிக்டர் அளவிற்கு லேசான நிலநடுக்கம்!

உத்தரகண்ட் மாநிலம் உத்தர்காசியில் புதனன்று அதிகாலையில் திடீரென லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானதாக தேசிய  நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 2.19 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தரையில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் இருந்ததாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

‘பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு எதிரான போராட்டம் தொடரும்’

“ஜனநாயகத்தையும், நாட்டின் அரசியலமைப்பையும் பலவீனப்படுத்தும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிரான காங்கிரசின் போராட்டம் தொடரும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். “’எங்கள் போராட்டம் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக வின் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு எதிரானது’ என்று ராகுல் காந்தி கூறினார். அது தொட ரும். அரசியலமைப்பைப் பாதுகாக்க எங்களால் முடியும்” என்றும் கெலாட் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் ராமர் அல்ல; ஆனால் பாஜக ராவணன் பாதையில் செல்கிறது

“பகவான் ராமரைப் போல தெய்வீக குணத்துடன் ராகுல் காந்தி இருக்கிறார்” என்று காங்கி ரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கூறியிருந்தார். இதற்கு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாடியா கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், “ராகுல் காந்தி ராமர்  அல்ல. அதேநேரத்தில் அவர் ராமரின் பாதையை பின்பற்றி நடக்க முடியும். ராமரின் பாதையை பின்பற்ற எங்களுக்கு உரிமை இல்லை என பாஜக கூறுகிறது. இதை ராமரின் பாதையை பின்பற்றா மல் ராவணனின் பாதையை பின்பற்றுபவர்கள் கூறக்கூடாது” என்று சல்மான் குர்ஷித் பதிலடி கொடுத்துள்ளார்.

தில்லி மேயர் தேர்தலிலும் குழப்படி வேலையில் பாஜக!

அண்மையில் நடைபெற்ற தில்லி மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வெற்றிபெற்றது. பாஜக 104 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஜனவரி 6-ஆம் தேதி மேயர் மற்றும் துணைமேயர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  மேயர் பதவிக்கு ஷெல்லி ஒபராய், துணை மேயர் பதவிக்கு ஆலி முகமது இக்பால் ஆகி யோரை ஆம் ஆத்மி வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. அதிக கவுன்சிலர்கள் இருப்ப தால் இவர்களே வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது. ஆனால், போதிய கவுன்சிலர்கள்  இல்லாமலேயே, மேயர் பதவிக்கு ரேகா குப்தா, துணை மேயர் பதவிக்கு கமல் பக்ரி ஆகியோரை  பாஜக வேட்பாளர்களாக நிறுத்தி‘யுள்ளது. இதன்மூலம் உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக குதிரை பேரத்தை ஆரம்பித்து விட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கத்தியைத் தீட்டச் சொன்ன பிரக்யா சிங் மீது புகார்

கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற இந்து  ஜாகரனா வேதிகேயின் தென் மண்டல ஆண்டு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளியும், தற்போது பாஜக எம்.பி.யாக இருப்ப வருமான பிரக்யா சிங் தாக்குர் உரையாற்றினார். அப்போது, “இந்துக்கள் வீடுகளில் ஆயு தங்களை வைத்திருக்க வேண்டும். எதுவுமில்லை என்றால் காய்கறிகளை வெட்டுவதற்கு பயன்  படுத்தப்படும் கத்திகளையாவது கூர்மையாக வைத்திருக்க வேண்டும்” என்று வெறியை ஊட்டி னார். இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான தெஹ்சின் பூனவல்லா, பிரக்யா சிங் மீது சிவமோகா காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார்.

‘பாஜகவில் ஆணாதிக்கமா? அடிபணிய மாட்டேன்’

“புகார் கூறியவுடனேயே என் பிரச்சனைக்கு உள்ளுக்குள்ளேயே தீர்வு காணப்பட்டிருக்க முடி யும். ஆனால் யாரும் முன் வரவில்லை. ஆணாதிக்க உலகத்திற்கு நான் அடிபணிய மாட்டேன். ஒரு பெண், தான் சந்திக்கும் பிரச்சனை குறித்து கூறும் போது அவரை அமைதியாக இருக்க சொல்கிறார்கள். இந்து தர்மத்தை பின்பற்றும் மக்கள் தர்மத்தின் மீது நம்பிக்கை வைக்கட்டும். நீதியின் பக்கம் நீங்கள் நின்றிருந்தால் நல்லது. வாழாவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களை வாழ விடுங்கள்” என்று அண்ணாமலையால் பாஜக-விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் டுவிட்டரில் கொந்தளித்துள்ளார்.

நல்லாட்சி வாரத்தில் 53 லட்சம் மக்கள் குறைகளுக்கு தீர்வு?

ஒன்றிய அரசின் சார்பில் நாடு முழுவதும், ‘சுஷாசன் சப்தா’ எனப்படும் ‘நல்லாட்சி வாரம்’ கடைப்பிடிக்கப்பட்டது. ‘கிராமத்தை நோக்கி நிர்வாகம்’ என்ற கருப்பொருளில் டிசம்பர் 19 முதல்  25 வரை கடைப்பிடிக்கப்பட்ட இந்த நல்லாட்சி வாரத்தில், 53.8 லட்சம் பொதுமக்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன. அரசு சேவை தொடர்பான 3 கோடியே 10 லட்சம் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று மத்திய பணியாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

நள்ளிரவுக்கு  மேல் புத்தாண்டு கொண்டாட அனுமதில்லை

சென்னை,டிச.28- புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.  டிச.31 அன்று இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூ டுவதைத் தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. சுமார் 90,000 காவல்துறையினர், 10,000  ஊர்க்காவல் படையினர் என பாதுகாப்பு  பணியில் ஈடுபடுவார்கள். வாகன சோதனை தமிழ்நாடு முழுவதும் நடை பெறும். எனவே, நள்ளிரவு, மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. முதல் நாள் இரவும், புத்தாண்டின் போதும் கடற்கரைகளில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது. மது அருந்தியவர்கள், வாகனம்  ஓட்டக் கூடாது. மீறினால் கைது செய்யப் படுவர், அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும். வழிபாட்டுத் தலங்களுக்கு காவல்துறையால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள்.  கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது காவல்துறையின் அனைத்து நிபந்த னைகளையும் கட்டாயம் கடைப் பிடிக்கப்பட வேண்டும். அசம்பாவிதம் இல்லாத, விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட தமிழக காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனப் பணி  முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி

சென்னை,டிச.28- தமிழ்நாடு அரசு நடத்தி வரும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், அகில இந்திய  குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களிலுள்ள சமூக, பொருளாதாரத்தில் பின்தங் கியுள்ள, ஏழை, எளிய ஆர்வலர்களுக்கு பயனளிக்கும் வகையில் இப்பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. மேலும், இப்பயிற்சி மையத்தில் செப்டம்பர் 26 முதல் நவம்பர் 28 வரை ஒன்றிய அரசின் தேர்வாணையத்தால்  நடத்தப்பட்ட இந்திய வனப்பணி முதன்மைத் தேர்விற்காக 9 ஆர்வ லர்கள் தங்கி பயின்றார்கள். அவர்க ளில் 5 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 3 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இப்பயிற்சி மையத் தின் மூலம் மாதிரி ஆளுமைத் தேர்வு,  பணியிலுள்ள, ஓய்வு பெற்ற அகில  இந்திய குடிமைப் பணி அலுவலர் களாலும், தலை சிறந்த வல்லு நர்களாலும் பயிற்சி நடத்தப்படவுள்ளது.  மேலும்,  இப்பயிற்சி மையத்தின் மூலம் தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வ லர்கள் தவிர, மேற்குறித்த வனப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த பிற ஆர்வலர்களும், இப்பயிற்சி மையத்தில் ஜன. 2 மற்றும் 3 அன்று நடைபெறவுள்ள மாதிரி  ஆளுமைத் தேர்வில் பங்கு பெறலாம். அவ்வாறு பங்கு பெற விரும்பும் ஆர்வலர்கள், தங்களது விருப்பத்தை மின்னஞ்சல் முகவரிக்கு டிச. 30க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

அதிமுகவை மீட்கும் வரை  ஓயமாட்டோம்: டி.டி.வி.தினகரன்

சென்னை, டிச.28- “அதிமுகவை மீட்டெடுக்கும் இலக்கை அடையும் வரை நாங்  கள் போராடுவோம்” என்று அமமுக  பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர் “அதிமுக இன்று தவறானவர்கள் கை களில் இருக்கிறது. எனவேதான், அம முகவை ஆரம்பித்த அன்றே சொன் னேன், அதிமுக பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியாரின் கைககளில் எம்ஜி ஆரின் கட்சியும், சின்னமும் உள்ளது என்று கூறினேன். அதை மீட்டெடுப்பதற்காகத் தான், லட்சக்கணக்கான தொண்டர்கள்  என்னை தளபதியாக நியமித்து அம முகவின் பொதுச் செயலாளராக நிய மித்து செயல்பட வைத்துள்ளனர். இந்த இலக்கை அடையும் வரை போராடுவோம். தேர்தல்களில் பின்ன டைவு ஏற்படுவதால் எங்களால் அந்த  இலக்கை அடைய முடியவில்லை. ஆனால், எங்களது இலக்கில் இருந்து என்றைக்கும் நாங்கள் விலக மாட்டோம் என்று அவர் கூறினார்.

தங்கம் விலை ரூ.152 உயர்வு

சென்னை, டிச.28- தங்கம் விலையில் சில நாட்க ளாக ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது.  சென்னையில் புதனன்று (டிச.28) ஆபரண தங்கத்தின் விலையில் சவ ரனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.40 ஆயிரத்து  840-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம்  ரூ.5 ஆயிரத்து 105 ஆக உயர்ந்துள்ளது.  வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.74  ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு  கிராம் வெள்ளி ரூ.74.60-க்கு விற்பனை யானது.

திவாலாகின்றன ஜெர்மனி மருத்துவமனைகள்

பெர்லின், டிச.28- 2023-ஆம் ஆண்டில் ஜெர்மனியில் உள்ள  மருத்துவமனைகள் திவாலாகும் நிலைமை யில் இருக்கின்றன என்று அந்நாட்டின் மருத்துவமனைகள் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட்ட ஆய்வு விபரங்கள் தெரி விக்கின்றன. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை அப்படியே பின்பற்றியதன் விளைவாக ஐரோப்பிய நாடுகளில் கடும் நெருக்கடி நிலவி வருகிறது. விலை வாசி உயர்வு மற்றும் எரிபொருள் பற்றாக் குறையால் மக்கள் திண்டாடி வருகின்றனர். எரிபொருள் பற்றாக்குறையால் ஏராளமான நிறுவனங்களும் தள்ளாடுகின்றன. இந்நிலையில், இந்த நெருக்கடியிலிருந்து மருத்துவமனைகளும் தப்பவில்லை என்று ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.  ஜெர்மனியின் மருத்துவமனைகள் கூட்ட மைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி, ‘‘வெறும் 6 விழுக்காடு மருத்துவமனை களின் நிதி நிலைமைதான் நன்றாக  இருக்கின்றது. பாதிக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளின் நிதி நிலைமை 2023 ஆம் ஆண்டில் மேலும் மோச மாகும். மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிரொலிக்கும். மருத்துவமனைகளில் உள்ள ஊழியர் களின் எண்ணிக்கை பெரும் கவலை யளிப்பதாக இருக்கிறது’’ என்று தெரிய வந்துள்ளது.  தங்களது ஆய்வு குறித்து கூட்ட மைப்பின் தலைவரான ஜெரால்டு காஸ் கூறு கையில், ‘‘மருத்துவமனைகள் திவாலாகப் போகின்றன என்பது பல மாதங்களுக்கு முன்பே சொல்லப்பட்டது. அந்தக் கணிப்பு  தற்போது நிறைவேறுகிறது. 2022 ஆம் ஆண்டில் மத்தியிலேயே செவிலியர் பணி யிடங்களை நிரப்புவதில் மருத்துவ மனைகள் பெரும் நெருக்கடியைச் சந்தித்தன. கிட்டத்தட்ட 90 விழுக்காடு மருத்துவமனைகள் இந்தப் பணியிடங் களை நிரப்பவில்லை’’ என்றார்.