சென்னை, பிப்.26- 18 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் விழுப்புரம் ஆனந்த ஜோதி ஆசிரமத்தில் சித்திரவதை, பாலியல் அத்துமீறல்கள், மனம் நலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாலி யல் வன்புணர்வு, வியாபார நோக்கத்துடன் வெளி மாநிலங்களுக்கு கடத்தல், 500க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதும் வெளிச்சத்துக்கு வந்தது. இதுபோன்ற ஆசி ரமங்கள், அங்கு தங்கியிருப்பவர்கள் பாது காப்பு குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற் கொள்ளப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது விரிவான முறையில் நடைபெற வேண் டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின் றனர்.
கொடூர இல்லங்கள்
தமிழ்நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு (2017) முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி செயல்பட்டு வந்த 1,932 குழந்தைகள் காப்ப கங்களில் 800-க்கும் மேற்பட்டவை அனுமதி பெறவில்லை. 2018 ஆம் ஆண்டில் மேலும் 500 காப்பகங்கள் அனுமதி இல்லாமல் செயல் பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அரசின் கணக்குப்படி அன்றைய தினத்தில் 500க்கும் குறைவான காப்பகங்களே அனுமதியுடன் செயல்பட்டு வந்தன. ஒரு சிலவற்றை தவிர பெரும்பாலான தொண்டு நிறுவனங்களில் மர்ம மரணங்கள் தொடர்கதையாகவே இருந்து வருகின்றன. பெண்களை பாலியல் வன்கொடுமைக்கும் வன்புணர்ச்சிக்கும் உட்படுத்துகின்றனர். மறுத்தால் அடித்து சித்திரவதை செய்கின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் உறுப்புகளை திருடி விற்பனை செய்து அதன் மூலம் கொழுத்து வருகின்றனர். இவற்றை நினைத்தாலே நெஞ்சம் பதைக்கிறது. இத்த கைய கொடூரச் செயல்கள் கடந்த 10 ஆண்டு காலமாக அதிகரித்துக் கொண்டே வருகின் றன. குமரி மாவட்டத்தில் ஆழிக்கல் மற்றும் தேங்காய் பட்டணம் அருகே செயல்பட்டு வந்த தனியார் குழந்தைகள் காப்பகத்தின் சித்திர வதை 2014-ஆம் ஆண்டு தமிழ்நாட்டையே அதிரவைத்தது. அதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி காப்பகத்தில் மாணவிகள் பாலி யல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், திருவண்ணாமலை யில் தாய்-தந்தையை இழந்த பெண் குழந்தை கள் தங்கி படித்து வந்த அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகமான மெர்சி மிஷினரி ஹோம் ஃபார் சில்ட்ரென்ஸில் பாலியல் தொந்தரவுகள் கொடுத்தது, குளியல் அறையில் தவறான முறையில் படம் மற்றும் வீடியோ எடுத்து விற் பனை செய்ததும் அம்பலத்துக்கு வந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் முதியவர்களையும் குழந்தைகளையும் கொன்று புதைத்தது; சென்னை மேடவாக்கம் நியூ ஹோம் ஆப் லைஃப் காப்பகத்தில் இடம் வசதி, பாதுகாப்பு இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டது; திரு முருகன் பூண்டி விவேகானந்தா சேவா இல் லத்தின் காப்பகத்தில் கெட்டுப் போன உணவை கொடுத்ததன் மூலம் குழந்தைகள் உயிரி ழக்க நேர்ந்தது. தேனி, செங்கல்பட்டு, திரு நெல்வேலி என்று புகார்கள் இல்லாத மாவட் டமே இல்லை என மிக மோசமான நிகழ்வு கள் தமிழ்நாடு மக்களின் மனசாட்சியை உலுக்கி எடுத்தன. மதுரை மாவட்டம், சமய நல்லூர் அருகே ‘அக்சயா’ என்கிற தொண்டு நிறுவனம் காப்ப கம் ஒன்றை நடத்தி வந்தது. பத்து ஆண்டு களுக்கு முன்பு (2014) அங்கிருந்து தப்பி வந்த மெகர்நிஷா என்கிற 21 வயது இளம் பெண் ணுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்கள் அடைக்கலம் கொடுத்த னர். அதன் பிறகுதான், அந்த காப்பகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, உடல் உறுப்புகள் திருடுவது அனைத்தும் வெளியில் தெரிந்தது. ஆனால், அந்த பெண், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று வழக்கம் போல் திசை திருப்பியது காவல்துறை. மாதர் சங்கம் தொடர்ச்சியாகப் போராடி யது. வேறு வழியின்றி அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு நடத்திய விசாரணையில், அங்கு தங்கி இருந்தவர் களில் 118 பேர் ஓராண்டில் இறந்தும், உடற்கூரா ய்வு கூட நடத்தாமல் தகனம் செய்த முறைகேடு கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்தன. இதனால் அப்போதைக்கு சூழ்நிலையை சமாளிக்க, தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு சாரா தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத் தும் காப்பகங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப் படும். அங்கு தங்கியிருப்போரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றது அன்றைய அதிமுக அரசு.
இரையான பிஞ்சுகள்...
‘இதயம்’ அறக்கட்டளையின் கீழ் மதுரை யில் செயல்பட்டு வந்த காப்பகத்தில் ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கும் பெண் குழந்தை ரூ.2 லட்சத்துக்கும் காப்பகத்தில் இருந்து விற் பனை செய்ததும் அம்பலமானது. அங்கு நடந்த விசாரணையில்,12 மாத ஆண் குழந்தை ஒன்று மரணமடைந்தது என்றும் இரண்டு வயதான பெண் குழந்தை காணாமல் போனதாகவும் காப்பகத்தின் நிர்வாகிகள் நாடகமாடியதும் நிரூபணமானது. இந்த சம்பவம் அதிமுக எடப்பாடி தலைமை யிலான ஆட்சியின் இறுதி காலத்தில் அரங்கே றியது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, குழந்தை கள் கடத்தப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார். திருச்சி சுப்பிரமணியபுரம் குழந்தைகள் காப்பகத்தில் 89 பெண் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக 2014-15 ஆம் ஆண்டில் புகார்கள் பறந்தன. அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. உசிலம்பட்டி பகுதியில் சிசுக் கொலைக்கு ஆளாக இருந்த பெண் குழந்தைகளை மீட்டு வந்து, இங்கு பராமரிப்பதாக கூறிய நிர்வா கம், அந்த குழந்தைகளை ஒப்படைத்தவர்கள் யார்? முகவரி என்ன? எந்த ஆண்டு அழைத்து வரப்பட்டது? என்கிற எந்த விபரத்தையும் வெளிப்படையாக அறிவிக்க தவறினர். பின்னர் அந்தக் காப்பகத்தின் நிர்வாகிகள் கிதியோன், ஜேக்கப் இருவரும் தலைமறைவானார்கள். சென்னைக்கு அருகில் மேற்கு தாம்ப ரத்தில் அனுமதியில்லாமலும் முறையான பரா மரிப்பு இல்லாமலும் செயல்பட்ட“உதவும் உள்ளம்” காப்பகத்தில் சிறுவர்கள் கடத்தப் படுகிறார்கள் என்று 2015 ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் குவிந்தன. ஆரம் பத்தில் மூடி மறைத்த காவல்துறை, அரசு அதி காரிகளின் ஆய்வுக்கு பின்னர் அந்த காப்ப கத்தை மூடி‘சீல்’ வைத்தது. அத்துடன் 32 சிறு வர்களையும் மீட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால்? 13 சிறு வர்களை ஆள் மாறாட்டம் செய்ததும் அம்பல மானது. அப்படி என்றால் அந்த சிறுவர்கள் கடத்தப்பட்டார்களா? என்ற கேள்வியும் எழுந்தது. இது சிறு துளி தான். இன்னமும் வெளியில் கொண்டு வராதது எத்தனையோ? கோவையை அடுத்துள்ள போத்தனூர் தொண்டு நிறுவன குழந்தைகள் காப்பகத்தில் மன வளர்ச்சி குறைபாடு, மாற்றுத் திறனாளி கள், ஆதரவற்றோர் என 250-க்கும் மேற் பட்டோர் தங்கி கல்வி பயின்று வந்தனர். இங்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாகவும் ஊழல், முறைகேடு கள் நடப்பதாகவும் 2018 ஆம் ஆண்டு குற்றச் சாட்டு எழுந்தது. கருணையே இல்லாதவர்கள் கைகளில் கருணை இல்லங்கள் செல்வதையும் அவை கொடூர இல்லங்களாக மாறுவதையும் அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. கல்லாக்கட்டும் காப்பகங்களை நிரந்தர மாக இழுத்து மூட வேண்டும். அரசின் ஆதர வற்றோர், முதியோர், குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் அதிகரிக்க வேண்டும். அரசு சாரா அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் நடத்தும் காப்பகங்கள் அனைத்தையும் தொடர்ந்து ஆய்வு செய்வ தோடு நிபந்தனைகளை கடுமையாக்கவும் வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
தொகுப்பு: ஸ்ரீராமுலு