அரசியலமைப்புச் சட்டம் என்பது வெறும் ஆவணம் மட்டுமல்ல; அது நமது குடியரசின் இதயமும் ஆன்மாவும் ஆகும். இன்றைய சூழலில், மிகுந்த வருத்தத்துடனும், கவலையுடனும், வேதனை யுடனும் பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், தற்போதைய ஆட்சி தொடர்ந்து அரசி யலமைப்பை புல்டோசர் கொண்டு அழித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் பல்வேறு மூலைகளில் நடைபெறும் ஜனநாயக மீறல்கள் கண்கூடாகத் தெரிகின்றன. தமிழ்நாட்டிலிருந்து பஞ்சாப் வரை, மகாராஷ்டிரா விலிருந்து மணிப்பூர் வரை, சம்பலிலிருந்து ஆஜ்மீர் தர்கா வரை பரவியிருக்கும் அநீதிகள், விவ சாயிகள் போராட்டங்களிலிருந்து தேர்தல் பத்தி ரங்கள் வரை நீண்ட பட்டியலாக விரிகின்றன. பசுக் குண்டர்களின் வன்முறைகளிலிருந்து புல்டோ சர் நீதி வரையிலான அடக்குமுறைகள், பாஜக ஆட்சி இல்லாத மாநில அரசுகளுக்கு இடையூறு செய்யும் ஆளுநர்கள் வரை பரவியிருக்கும் ஜன நாயக விரோத செயல்கள் - இவையனைத்தும் நாட்டின் ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மதச்சார்பின்மையை அழிக்கும் திட்டமிட்ட முயற்சிகளாகும்.
வலதுசாரி அச்சுறுத்தல்கள்
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமூகநீதி ஆகிய நமது நாட்டின் அரசியலமைப்பு அடித்தளங்களை அசைக்கும் வலதுசாரி சித்தாந்தங்களின் எழுச்சியே இன்றைய மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்த அடிப்படை தன்மைகள் மறுக்கப்பட்டால், நாட்டின் குடி மக்களுக்கு எதிர்காலமே இல்லாமல் போகும் நிலை உருவாகும். ‘ஒரே இந்தியா, சிறந்த இந்தியா’ என்ற முழக்கம் வெறும் வெற்று கோஷமாகவே உள்ளது. ஒன்றிய அரசு பின்பற்றும் சங்பரிவார் சித்தாந்தத்தின்படி, ஒரே நாடு என்பது ஒரே இந்துத்துவா நாடாகவும், ஒரே மொழி என்பது இந்தி மொழியாகவும், ஒரே கலாச்சாரம் என்பது சங்பரிவார் கலாச்சாரமாக வும் மட்டுமே கருதப்படுகிறது. இதில் பன்முகத் தன்மைக்கோ, பிற மதங்களுக்கோ, திராவிட கலாச்சாரம் உள்ளிட்ட பிற பிராந்திய கலாச் சாரங்களுக்கோ இடமில்லை.
வரலாற்றுப் பார்வையும் தற்கால நிலையும்
நமது இந்தியாவின் உண்மையான அடை யாளமும், பெருமையுமான “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற கோட்பாட்டை இந்துத்துவ கொள்கை ஏற்கவில்லை. கடந்த 77 ஆண்டு களுக்கு முன்பு, நமது இந்தியக் குடியரசின் நிறு வனத் தந்தைகளான மகாத்மா காந்தி, பண்டிட் நேரு, பாபாசாகேப் அம்பேத்கர், பட்டேல் மற்றும் பலர் புதிய இந்தியாவை மதவெறி, சாதிவெறி மற்றும் எதேச்சதிகாரத்தால் அழிக்கப்படாமல் பாதுகாக்கும் புதிய பாதையை வகுத்தளித்தனர். ஆனால், 2002 குஜராத் கோத்ரா கல வரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான உயிர் களை பலிவாங்கியது முதல் மணிப்பூர் மோதல் வரை ஒன்றிய அரசு மதவெறி, சாதிவெறி மற்றும் எதேச்சதிகாரத்தைக் கொண்டு மக்களைப் பிளவுபடுத்தும் விதைகளை விதைத்து வருகிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அரசியலமைப்புச் சட்டம் சமத்துவத்தை உறுதி செய்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று, பெருமுதலாளிகளுக்கு சாதகமான ஆட்சி யினால் சமத்துவம் உடைபடுகிறது. கடந்த 30 ஆண்டுகளில், நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 25 லட்சம் கோடி ரூபாயி லிருந்து 200 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி வளர்ந்துள்ளது. ஆனால், இந்த பொருளாதார வளர்ச்சி இந்திய சமுதாயத்தின் அனைத்து பிரிவு களுக்கும் சென்றடையவில்லை என்பது வேதனையான உண்மை. நமது மக்கள் தொகையில் 50 விழுக்காடு உள்ள தொழிலாளர் வர்க்கம், நாட்டின் மொத்த செல்வத்தில் 3 விழுக்காட்டிற்கு குறைவாகவே பெற்றுள்ளனர். மாறாக, 5 விழுக்காடே உள்ள செல்வந்தர்கள் நாட்டின் மொத்த செல்வத்தின் 60 விழுக்காட்டை கைப்பற்றியுள்ளனர்.
அம்பேத்கரின் சட்டத்தை உயர்த்திப் பிடிப்போம்!
ஒரு சிறந்த, ஒன்றுபட்ட இந்தியாவிற்கு, நாம் பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தையே பின்பற்ற வேண்டும்; கோல்வால்கரின் ‘சிந்தனைக் கொத்து அல்லது சாவர்க்கரின் இந்துத்துவா’ நூல்களை அல்ல. இந்தியா என்பது கோட்சே அல்லது சாவர்க்கரின் மண் அல்ல. இது மகாத்மாவின் மண். இங்கு நம்பிக்கை அவநம்பிக்கையை வெல்லும்; அன்பு வெறுப்பை வெல்லும்; சகோ தரத்துவம் பகைமையை வெல்லும்; சமத்துவம் ஏற்றத்தாழ்வை வெல்லும்; சுதந்திரம் அடிமைத் தனத்தை வெல்லும். அற்ப அரசியலை கடந்து நின்று, மிகவும் தாமதமாவதற்கு முன், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் அறநெறிகளின் விழு மியங்களை உயர்த்திப்பிடிப்போம், அவற்றை உறுதியோடு நிலைநிறுத்துவோம்.