சென்னை, ஏப்.30- மே தினத்தை முன்னிட்டு சென்னை யில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலு வலகத்தில் மே 1 ஞாயிறன்று காலை 8.30 மணிக்கு மே தின கொடியேற்று விழா நடைபெறுகிறது. கட்சியின் செங் கொடியை மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் ஏற்றி வைத்து உரையாற்று கிறார். பின்னர் சென்னை, கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகிலி ருந்து காலை 9.30 மணிக்கு தொடங்கும் பேரணியில் கலந்து கொண்டு, கோஷா மருத்துவமனை அருகில் உள்ள தோழர் மா. சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து, மே தின கொடியை கே. பால கிருஷ்ணன் ஏற்றி வைத்து உரையாற்று கிறார் என்று கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.