states

img

கோபாலபட்டினம் பகுதியில் தேங்கி இருக்கும் சாக்கடை, குப்பையை அகற்ற நடவடிக்கை

அறந்தாங்கி, ஜன.10 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடை யார்கோவில் தாலுகா கோபாலபட்டி னம் அவுலியா நகரில் 250-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள், மீனவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கள் ஆகியும் இப்பகுதியில் சாக்கடை, சகதிகள் மற்றும் மலைபோல் குவிந்திருக்கும் குப்பைகளால், இங்கு வசிப்பவர்களுக்கு பல நோய்கள் உரு வாகும் அவல நிலை உள்ளது. இதனை சரிசெய்து தர வலியுறுத்தி சம்பந்தப் பட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு கொடுத்தும், பல போராட்டங்கள் நடத்தி யும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜமாத் நிர்வாகத்தினர், அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் செவ்வாயன்று மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.  போராட்டத்திற்கு சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், மாவட்டக் குழு உறுப்பினர்

சி.சுப்பிர மணியன்,  கோபாலபட்டினம் ஜமாத்  தலைவர் செய்யது முகமது, முகமதலி ஜின்னா, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் நெருப்பு முருகேஷ், மீமிசல் நகரச் செய லாளர் அமீர் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். போராட்டம் நடந்து கொண்டி ருந்த போது, மாவட்ட ஆட்சியர் அறி வுறுத்தலின்பேரில், ஆவுடையார் கோவில் வட்டாட்சியர், வில்லியம் மோசஸ், காவல் துணை கண்காணிப்பா ளர் தினேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். கோபாலபட்டினம் பகுதியில் தேங்கி இருக்கும் குப்பைகள் உடனடி யாக அகற்றப்படும். குடியிருப்பு பகுதிக்குள் சாக்கடை தேங்காமல் இருக்க, ஒரு மாதத்திற்குள் வாய்க்கால் அமைத்து சாலை வசதி செய்து தரப்படும் என உறுதியளித்தனர். இதை  ஏற்று, ஒரு மாதத்திற்குள் கோரிக்கை களை நிறைவேற்றவில்லை என்றால், பிப்ரவரி 10 ஆம் தேதி மீண்டும் மக்களை  திரட்டி போராட்டம் நடத்தப்படும் என சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கூறினார். பின்னர், மூன்று மணி நேரம் நடைபெற்ற மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.