states

சிறுபான்மை மாணவர்கள் உரிமை மீட்பு மாநாடு

சென்னை, மார்ச் 13- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுபான்மை மாணவர்கள் உரிமை மீட்பு மாநாடு மார்ச் 22இல்  திருச்சியில் நடைபெறுகிறது என  பொதுச்செயலாளர் ச.மயில் தெரிவித்துள்ளார். ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம்  சென்னையில் மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமையில் நடைபெற்றது. பின்னர் ச.மயில் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை யின் கீழ் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாண வர்களுக்கு, அரசுப் பள்ளிகளில் பயி லும் மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசின் அனைத்து நலத்திட்ட உதவி களும் அப்பள்ளிகள் தொடங்கப்பட்ட நாள் முதல் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தமிழ்நாடு அரசு கடந்த 6 ஆண்டுகளாக அரசுப் பள்ளி மாணவர்கள், அரசு உதவிபெறும் பள்ளி  மாணவர்கள் என பாகுபாடு காட்டி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் பலவற்றை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதில்லை.

இதனால் தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கை கொண்ட அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான ஏழை, எளிய, கிராமப் புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். அதேபோல் ஒன்றிய அரசு கடந்த  16 ஆண்டுகளாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் ஏழை சிறுபான்மை மாண வர்களுக்கு வழங்கி வந்த கல்வி  உதவித் தொகையை இக்கல்வி யாண்டு முதல் எவ்விதக் காரணமு மின்றி நிறுத்தியுள்ளது. இதனால் சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த ஏழை  மாணவர்கள் பெற்று வந்த உதவித் தொகையை இழந்துள்ளனர். எனவே கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மார்ச் 22 அன்று “அரசு  உதவிபெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுபான்மை மாணவர்கள் உரிமை மீட்பு மாநாடு” நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கல்வியாளர்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர். இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.