- கேரளாவை சேர்ந்த இந்தி யத் திரையுலகின் பல மொழி பாடகர்களில் ஒருவரான கேகே என்று அழைக்கப்படும் கிருஷ் ணகுமார் குன்னத், கொல் கத்தாவில் செவ்வாயன்று நடைபெற்ற இசை நிக ழ்ச்சியில் பங்கேற்றபோது மயங்கி விழுந்து உயிரி ழந்தார். இவரின் மறை வுக்கு பிரதமர் மோடி, குடி யரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு, அமித்ஷா, அனுராக் தாக்கூர், கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புலிவனம் வியாக்ர புரீஸ்வரர் கோவில் நிலம் அளவிடும் பணியை புத னன்று இந்து சமய அற நிலையத் துறை அமைச் சர் பி.கே.சேகர்பாபு தொட ங்கி வைத்தார். அப்போது ஒரு லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் அளவிடும் பணி கள் மூன்று மாதத்தில் நிறைவடையும் என தெரி வித்தார்.
- வேலூர் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி யின் குடியாத்தம் கிளை வங்கியில், மகளிர் சுய உத விக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவ ணங்கள் மூலம் ரூ.97 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்துள்ள கூட் டுறவு வங்கி மேலாளர் உமாமகேஸ்வரி (38) கைது செய்யப்பட்டுள்ளார்.
- பஞ்சாபி பாடகர் சித்து மூஸேவாலா படுகொலை செய்யப்பட்ட சம்பவத் தில் 12 பேரைப் பிடித்து காவல் துறை விசாரணை நடத்திய நிலையில், ஒரு வரை செவ்வாயன்று கைது செய்தது.
- இந்தியா - வங்கதேச நாடு களுக்கு இடையே மூன்றா வது ரயில் சேவையை ஒன்றிய ரயில்வே அமைச் சர் அஸ்வினி வைஷ்ணவ் புதனன்று தொடங்கி வைத்தார்.
- மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று ஒன்றிய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் பிரக லாத் சிங் படேல் தெரி வித்துள்ளார்.
- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் சிபிஐ விசாரணை ஒரு தலைப் பட்சமானது என போராட்ட டக்குழு ஒருங்கிணைப் பாளரும் வழக்கறிஞ ருமான வாஞ்சிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
- நாட்டில் தென்மேற்கு பருவ மழை ஏற்கனவே கணித்ததை விட கூடு தல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- இலங்கையை போன்று பாகிஸ்தானிலும் ஏற்ப ட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் முன்னெப் போதும் இல்லாத வகை யில் சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.213 அதி கரித்து ரூ.605 ஆகவும், நெய் கிலோவுக்கு ரூ.208 அதிகரித்து ரூ.555 ஆக வும் விற்பனை செய்யப் படுகிறது.
- இரண்டு முக்கியமான வர்த்தக நகரங்களை இணைக்கும் ரயில் பாதைத் திட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று மெக்சிகோவின் ஜனாதிபதி ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார் தெரிவித்துள்ளார். வழக்குகளைப் பதிவு செய்து நீதிமன்றத் தடைகள் மூலமாக இத்திட்டத்தை முடக்க எதிர்க்கட்சிகளும், பெருநிறுவனங்களும் முயற்சித்து வருகின்றன. சுற்றுச்சூழல் தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்து, திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று ஓப்ரடார் கூறியிருக்கிறார்.
- நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு துனீசியாவின் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. ஜூன் 16 அன்று நடைபெறவிருக்கும் இந்த வேலை நிறுத்தத்தில் அனைத்துத் தொழிலாளர்களும் பங்கேற்க வேண்டும் என்று நாட்டின் பெரிய தொழிற்சங்கமான யுஜிடிடி கேட்டுக் கொண்டுள்ளது. ஐ.எம்.எப். நிபந்தனைகளை நிறைவேற்ற தொழி லாளர்கள் மீது சுமையை ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
- ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரையில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 16 லட்சத்தைத் தொட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 52 ஆயிரத்து 239 ஆகும். பெருந்தொற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளாக தென் ஆப்பிரிக்கா, மொராக்கோ, துனீசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் உள்ளன. தென் பகுதியில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளே அதிகமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. மிகக் குறைவான பாதிப்பை அடைந்தது மத்திய ஆப்பிரிக்க நாடுகளாகும்.