states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்

பாஜகவின் வகுப்புவாத அரசியலால் வடகிழக்கு மாநிலங்க ளில் ஒன்றான மணிப்பூர் கடந்த 5 மாத காலமாக பற்றி எரிந்து  வரும் நிலையில், கலவரத்திற்கு இதுவரை 170-க்கும் மேற் பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், புதனன்று நள்ளிரவு மணிப்பூ ரின் இம்பால் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட பட்சோய் என்ற இடத்தில்  மர்ம நபர்கள் 2 வீடுகளைத் தீ வைத்து எரித்தனர். இந்த தீ வைப்பு சம்ப வங்களால் மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இம்பால் மேற்கு பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

2023 அதிக வெப்பமான ஆண்டு

கடந்த செப்டம்பர் மாதம் இதுவரை இல்லாத வகையில் அதிக வெப்பமான மாதமாக பதி வான நிலையில்  2023 மிக அதிக வெப்பமான ஆண்டாக பதிவாக இருக்கிறது என கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை (C3S) அமைப்பு தெரிவித்துள்ளது.  இந்தாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை உலகளாவிய சராசரி வெப்பநிலையை விட 0.52 டிகிரி செல்சியஸ் (0.9 டிகிரி பாரன்ஹீட்) அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. அதிக வெப்பமான ஆண்டாகக் கூறப் பட்ட 2016 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களை விட வும் இந்த அளவு  0.05 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். அதிகளவிலான புதைபடிவ எரிபொருட்கள் காரண மாக வெப்ப அலைகள் மற்றும் புயல்கள் போன்ற கால நிலை மாற்றங்கள் தீவிரமாகவும் தொடர் நிகழ்வுகளா கவும் மாறி வருகிறது.தொழிற்புரட்சிக்கு முன்பு இருந்த உலகளாவிய சராசரி வெப்பநிலையை விட  தற்போது  1.4 டிகிரி செல்சியஸ் அதிகமாகி உள்ளது. லிபியாவில் ஏற்பட்ட டேனியல் புயல்,அயர்லாந்து, வடக்கு பிரிட்டன் மற்றும் ஸ்காண்டிநேவியன்  உள்ளிட்ட  ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரேசில், சிலி உள்ளிட்ட  லத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவான பெருமழை போன்றவற்றின் காரணமாக  இந்த செப்டம்பர் மாதம் அதிக வெப்பமான மாதமாக மட்டுமில்லாமல் புயல்கள் மூலம் பேரழிவை ஏற்படுத்திய ஈரப்பதமான மாதமாகவும் உள்ளதென கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை அமைப்பு தன் அறிக்கையில் கூறியுள்ளது.

உக்ரைனுக்கு 11 லட்சம் குண்டுகள் அனுப்பும் அமெரிக்கா

வாஷிங்டன்,அக்.5- கடன் நெருக்கடியில் சிக்கி நாட்டின் துறைகள் முடங்கும் நிலை வந்த போதி லும் அமெரிக்காவின் போர் வெறி அடங்க வில்லை. உக்ரைன்- ரஷ்யா போரை  தொடர்ந்து தூண்டிவிடும் நடவடிக்கை யின் ஒரு பகுதியாக ஈரானில் இருந்து அமெரிக்க ராணுவம் திருடி வந்த ஆயு தங்களில் 7.66 எம்எம் கொண்ட 11 லட்சம் துப்பாக்கிக் குண்டுகளை தற்போது உக்ரைன் நாட்டிற்கு அனுப்புகிறது அமெரிக்கா.  உக்ரைன்- ரஷ்யா போரில் ரஷ்யா விற்கும், ஏமனில் உள்ள ஹவுதி போராட் டக்குழுவிற்கும் ஈரான் ஆதரவு தருவ தால் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான முரண்பாடு அதிகரித்துள் ளது. இந்த நிலையில்தான் அமெ ரிக்கா  ஈரானிடம் இருந்து பறித்த ஆயுதங்க ளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.  உக்ரைனுக்கு அதிகளவில் ஆயுத உதவி செய்வதை கட்டுப்படுத்த  குடியரசு கட்சி, ஜனநாயக கட்சிக்கு அழுத்தம் கொ டுத்து வரும் நிலையில் உக்ரைனுக்கான ஆயுத உதவி அமெரிக்க ஜனாதிபதி தேர்த லில் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. 

ரூ.200 கோடி மதிப்பிலான  அரசு நிலம் மீட்பு

சென்னை, அக்.5- சென்னை பல்லாவரத்தில் தனியார் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்த ரூ.200 கோடி மதிப்புள்ள நிலத்தை  அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்பு டன் மீட்டனர். பல்லாவரத்தை அடுத்த கண்டோன் மெண்ட் பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும். இந்த  இடத்தின் அருகே அரசுக்கு சொந்த மான நிலம் உள்ளது. தற்போது இந்த  நிலத்தின் மதிப்பு ரூ.200 கோடியாகும்.. இந்த நிலத்தை கடந்த பல ஆண்டு களாக அதே பகுதியை சேர்ந்த சிலர்  ஆக்கிரமித்து, வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள், செங்கல்பட்டு ஆட்சியருக்கு தொடர்ந்து  புகார் அனுப்பி வந்தனர். அதன்படி ஆட்சியர் உத்தரவின் பேரில் சம்பந்தப் பட்ட இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது ஆக்கிரமிக்கப்பட்ட இடம் அரசுக்கு சொந்தமானது என்பது  தெரியவந்தது. இதையடுத்து ஆக்கிர மிப்பு கட்டிடங்களை அகற்றி, அரசு  நிலத்தை மீட்க வேண்டும் என செங்கல் பட்டு ஆட்சியர் ராகுல்நாத், பல்லா வரம் வட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி வியாழக்கிழமை (அக்.5) பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமு கம் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள், பல்லாவரம் காவல் துறையினரின் பாதுகாப்போடு, அரசு  நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 வீடுகள், கம்பெனியை பூட்டி சீல் வைத்தனர். வீடுகளை பூட்டி சீல் வைப்பதற்கு முன்பு அங்கிருந்து பொருட்களை வெளியே எடுத்து செல்லுமாறு குடி யிருப்பு வாசிகளுக்கு உத்தரவிட்டனர். பொருட்கள் அனைத்தும் வெளியேற்றப் பட்டதும் வீட்டுக்கு சீல் வைத்தனர். பின்னர், மீட்கப்பட்ட அரசு நிலத்தில்,  இந்த இடம் அரசுக்கு சொந்தமானது. மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கை பலகை வைத்த னர். 

600 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

சென்னை, அக்.5- வார இறுதி நாட்களையொட்டி அக்.  7, 8 ஆகிய தேதிகளில் 600 சிறப்பு  பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு  போக்குவரத்து கழகம் அறிவித்துள் ளது. அக்.6 ஆம் தேதி தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் முக்கிய இடங்களுக்கு கூடுதலாக 300 பேருந்துகள் இயக்கப்படும். கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கம். பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜர்

சென்னை, அக்.5- திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு  தொடர்ந்த அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத் தில் பாஜக மாநில தலைவர் அண்ணா மலை வியாழக்கிழமை (அக்.5) ஆஜரானார். ஏற்கனவே ஜூலை 14 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நிலையில் இரண்டாவது முறையாக அண்ணாமலை ஆஜராகினார்.

மிதமான  மழைக்கு வாய்ப்பு

சென்னை, அக்.5- தமிழ்நாட்டில் அக்.11 வரை மிதமான  மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு  திசை காற்றின் வேக மாறுபாடு காரண மாக, அக்.11 வரை தமிழ்நாடு, புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை பெய் யக்கூடும்” என்று கூறப்பட்டுள்ளது.

தங்கம் விலை அதிகரிப்பு

சென்னை,அக்.5- தங்கத்தின் விலை உயர்வதும் குறை வதும் வாடிக்கையாக உள்ளது. கடந்த  சில மாதமாக தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வந்தது. சில தினங்களாக சற்று  குறைந்தது.  வியாழக்கிழமை (அக்.5) ஒரு சவரன் தங்கம் விலை ரூ.42,360-க்கும்,  ஒரு கிராம் ரூ.5,295-க்கும் விற்பனை யானது. வெள்ளி விலையும் அதிகரித் துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.73.50-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ  ரூ.73,500-க்கும் விற்பனை செய்யப்படு கிறது.

ஜெகத்ரட்சகன் வீடு, விடுதி,  அலுவலகங்களில் ரெய்டு

சென்னை, அக்.5- முன்னாள் அமைச்சரும் திமுக எம்பியுமான  ஜெகத் ரட்சகனின் வீடு, விடுதி, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட 70  இடங்களில் ஒரே நேரத்தில்  வருமான வரித்துறை அதி காரிகள் நடத்திய சோத னைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, தி.நகரில் உள்ள அவ ருக்கு சொந்தமான நட்சத் திர ஹோட்டல், பூந்தமல்லி யில் உள்ள கல்லூரிகளில்  வருமான வரித்துறை அதி காரிகள் வியாழக்கிழமை (அக்.5) அன்று சோதனை மேற்கொண்டனர்.  அதே போல், ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் வீட்டின்   பூட்டை உடைத்து சோதனை செய்ததாக கூறப்படு கிறது. ஜெகத்ரட்சகனின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் கலிங் கமலை மற்றும் புதுச்சேரி யில் உள்ள நட்சத்திர விடுதி கள், மருத்துவக் கல்லூரி உட்பட 70 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீட்டில்  வேலை வாய்ப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை,அக்.5- தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ்  வேலைவாய்ப்பு பெறுவதற்கான விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.  தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்கு மாநில  அரசு பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டி களில் பதக்கம் பெறும் வீரர்களை ஊக்கப் படுத்தும் வகையில் அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்  பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவதற்கு  விளையாட்டுப் போட்டிகளில் 1.1.2018 அன்றோ அல்லது அதன் பிறகோ பெற்ற சாதனைகள் தகுதியானவை யாக கருதப்படும். கோடைக்கால ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீ கரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்ட மைப்பால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள். சர்வ தேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம், காது கேளாதோருக்கான சர்வதேச  விளையாட்டு குழுவால் ஏற்பாடு செய்யப் பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது  கேளாதோர் விளையாட்டுகளில் பதக்கம் வென்றவர்கள். இளைஞர் நலன் மற்றும்  விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீ கரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும்  சீனியர் அளவிலான மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டி களாக கருத்தப்படும். மேலும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். எனவே, தமிழ்நாட்டை சார்ந்த தகுதி யான விளையாட்டு வீரர்கள் இந்த வழி காட்டுதலின்படி இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய இணைப்புகளுடன் 31.10.2023க்கு மாலை 5 மணிக்குள் இணையதள முகவரி அல்லது நேரு விளையாட்டரங்கில் இயங்கி  வரும் தலைமை அலுவலகத்தில் நேரில் விண்ணப்பித்திடுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.