states

ரஷ்யாவின் கைகளில் முக்கிய நகரம்?

மாஸ்கோ, ஜன.14- உக்ரைனின் கிழக்குப் பகுதியில் சோலேடார் நகரத்தைத் தாங்கள் கைப்பற்றி விட்டதாக ரஷ்யப் படைகள் அறிவித்துள் ளன. ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி 11 மாதங்கள் ஆகி விட்டன. உக்ரைனின் கிழக் குப்பகுதியான டோனெட்ஸ்க் பகுதியைத் தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்வ தாக ரஷ்யா அறிவித்தது. ஆனால் அப்பகு தியின் முழுக் கட்டுப்பாடும் தன் வசம் இல்லை என்பதால், தாக்குதல் நடவ டிக்கைகள் தொடர்ந்து கொண்டுள்ளன. டோனெட்ஸ்க் பகுதியின் முழுக்கட்டுப் பாட்டை எடுத்துக் கொள்ள உதவும் வகை யில் சோலேடார் நகரம் அமையும் என்று கருதப்படுகிறது. சோலேடார் நகரம் வர்த்தக ரீதியாக மட்டுமில்லாமல் ராணுவ ரீதியாகவும் முக்கியமான நகரமாகும். உப்பு காய்ச்சு வதற்குப் பிரபலமான நகரமான இதைக் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்தது. ஆனால், தங்கள் படைகள் இன்னும் போராடிக் கொண்டிருப்பதாக உக்ரைன் கூறியுள்ளது. புகை மண்டலமாக மாறி யுள்ளது என்றும், தங்கள் இருப்பிடங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் இடம் மாறுகிறார்கள் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்பட ஊழியர் தெரிவிக்கிறார். மேலும், கடந்த சில வாரங்களில் ஏற்பட்ட  பின்னடைவுகளால் சோர்வடைந்து இருந்த ரஷ்ய ராணுவத்திற்கு இந்த வெற்றி உற்சா கமளிக்கும் என்று கூறப்படுகிறது. சோலே டார் நகரின் மையப்பகுதியில் ஒரு பாது காப்புப் பிரிவை அமர்த்தியுள்ளனர். எஞ்சி யுள்ள உக்ரைன் படைகளை வெளியேற் றும் பணிகளை இந்தப் பிரிவினர் மேற் கொண்டு வருகிறார்கள் என்று ரஷ்ய ஆதர வுத் தலைவர் யெவ்ஜினி பிரிகோஜின் தெரி வித்துள்ளார்.