தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத்தை புதனன்று (செப்.13) சென்னை சூளையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஐ.பரந்தாமன் எம்எல்ஏ, பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.