states

2011ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை

சென்னை, ஜூன் 2- 2011ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப் பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், பதவி உயர்வு களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு ஒன்றிய அரசு,  கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது.  இந்த சட்டத்தின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என  2011இல் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், 2011ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை எனக் கூறி, அவர்க ளின் வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி  வைத்து தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12  ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும்,  ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாத வர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி யில்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டி ருந்தார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த  நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது  சபீக் அமர்வு, கடந்த 2011ஆம் ஆண்டுக்கு  முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கா விட்டாலும் பணியில் நீடிக்கலாம் என உத்தர விட்டது. ஊதிய உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமில்லை எனத் தெரி வித்த நீதிபதிகள், பதவி உயர்வு பெற ஆசிரி யர் தகுதித் தேர்வு கட்டாயம் என தீர்ப் பளித்துள்ளனர். நேரடியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்க ளுக்கு மட்டும் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற தமிழக அரசின் விதியை ரத்து செய்த நீதிபதிகள், பதவி உயர்வுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என தெளிவுபடுத்தியுள்ளனர்.