சென்னை,அக்.21- சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட மறுக்கும் ஆளு நருக்கு மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், தியாக சீலர் சங்கரய்யாவுக்கு , நவம்பர் 2 ஆம் தேதி நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவில், கௌரவ டாக்டர் பட்டம் வழங்க காமராசர் பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு முடிவெடுத்துள்ளது. தமிழ்நாடு அரசும் இதனை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்கு எதிராக நடந்துகொள்வது மன்னிக்க முடியாத மாபெரும் தவறு ஆகும். ஆளுநர் ரவி இனியாவது தனது தவறான போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், அதன் முதல் நடவடிக்கையாக மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராகவும், தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகளையும், அரசின் முற்போக்கான திட்டங்களையும் முட்டுக்கட்டை போட்டு தடுத்து நிறுத்தி, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக, மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக சட்டவிரோதமாகச் செயல்படும் ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பிலிருந்து அகற்ற வேண்டும் என்ற அரை கோடி தமிழர்கள் விருப்பத்தை குடியரசுத் தலைவரிடம் மதிமுக முறையிட்டுள் ளது என்றும் வைகோ சுட்டிக் காட்டியுள்ளார். ஜவாஹிருல்லா மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில் தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவர் மாணவத் தலைவர், சிறந்த பொதுவுடமை சிந்தனையா ளர்,
சிறந்த சட்டமன்ற உறுப்பினரு மான என். சங்கரய்யாவின் ஒப்புயர்வற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக 18.08.2023 அன்று நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு (Syndicate) கூட்டத்தில் அவருக்குக் கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பின்னர் 20.09.2023 அன்று நடை பெற்ற மதுரை காமராசர் பல்கலைக் கழக ஆட்சிப் பேரவைக் (Senate) கூட்டத்தில் எதிர்வரும் பட்டமளிப்பு விழாவில் கவுரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கவுரவ முனைவர் பட்டயம் அல்லது சான்றிதழில் பல்கலைக் கழக வேந்தர் கையொப்பமிட வேண்டும் என்ற விதியின் அடிப்படை யில் முனைவர் பட்டம் (D.Litt) வழங்க அனுமதி கோரும் கோப்பு பல்கலைக்கழகத்தால் ஆளுநர்-வேந்தரிடம் சமர்ப்பிக்கப்பட்ட போது, அவர் அதில் கையொப்ப மிட மறுத்துள்ளார். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட உன்னத தலைவரை முனைவர் பட்ட கோப்பில் கையெழுத்திடாமல் தமிழக ஆளுநர் அவமதிப்பு செய்துள்ளார். ஆளுநர் தமது சித்தாந்த சிந்தனையை கடந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும். காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு மற்றும் ஆட்சிப் பேரவை யில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தின்படி என்.சங்கரய்யாவுக்கு கவரவ முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள் கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.