states

img

பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும்

சென்னை, ஜூன் 8- பாஜகவை வீழ்த்துவதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுசேர வேண்டும் என்று முதலமைச்சரும் திமுக  தலைவருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் சென்னை பின்னி மில்  மைதானத்தில் புதனன்று நடைபெற்றது. பொதுச்செயலாளர் துரை முருகன் வரவேற்றார். திமுக தலைவரும் தமிழ்நாடு முத லமைச்சருமான மு.க. ஸ்டாலின் பேசுகை யில், தலைவர் கலைஞர் எப்போதும் தோழமைக் கட்சித் தலைவர்களைத் தோளோடு தோள் சேர்த்துக் கொண்டு தான் வலம் வருவார். இதோ இந்த மேடை யில் நம்முடைய ஆசிரியர் உள்ளிட்ட தோழமை இயக்கங்களின் தலைவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.

அவர்களை வைத்துக்கொண்டுதான் உங்களது நூற்றாண்டு விழாவை நாங்கள் இன்றை க்கு தொடங்குகிறோம் என்றார். ஓராண்டு முழுவதும் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை, நூற்றாண்டு விழாவாக கொண்டாட இருக்கிறோம்.  இந்தியாவிலேயே முதன்முதலாக உழவர்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்தார். ஏழை, நடுத்தர வகுப்பு மகளி ருக்கு இலவசக் கல்வி வழங்கினார், ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டமும், குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் மகளிருக்கு உதவித் திட்டமும் கொண்டு வந்தார். மாணவர்க்கு இலவசப் பேருந்து பாஸ் வழங்கினார். அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும், அமைப்பு சாராத் தொழி லாளர் வாரியம் அமைத்ததும், உழவர் சந்தைகள் திறந்ததும், சமத்துவ புரங்களை உருவாக்கியதும் கலைஞர் தான். அந்தளவுக்கு ஒடுக்கப்பட்ட, அடக்கப் பட்ட, ஏழை எளிய மக்களுக்கான ஆட்சி யாக வடிவமைத்துக் கொடுத்தவர்தான் தலைவர் கலைஞர். ஒரு கருத்தியலின் தலைவராகவும், கடந்தகாலப் பெருமிதங்களோடு நிகழ்காலச் செயல்பாடுகளை இணைத்து, நிகழ்காலச் செயல்பாடு களோடு எதிர்கால இலக்குகளைத் தீர்மானித்தவர். திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து இன்றைக்கு சிலர்  பயப்படுகிறார்கள். கண்ணை மூடிக் கொண்டு விதண்டாவாதம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.  நாம் தமிழ்நாடு என்ற மாநிலத்தை இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக வளர்க்கப் பாடுபட்டு வருகிறோம். 

மதுரையில் கலைஞர்   நினைவு நூலகம்

கலைஞரின் நூற்றாண்டு விழா  கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகத் தான், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சென்னை - கிண்டியில் அமைக்கப்படும் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம், திருவாரூரில் கலைஞர் கோட்டம் ஆகியவற்றைத் திறந்து  வைக்க இருக்கிறோம். ஆகஸ்ட் 7ஆம்  தேதி சென்னை கடற்கரையில் கலைஞர்  நினைவகம் திறப்புவிழா காண இருக்கிறது. இதற்கிடையேதான் ஜனநாயகப் போர்க்களமான நாடாளுமன்றத் தேர்தல் களம் நமக்காக காத்திருக்கிறது. எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்று தீர்மானிப்பதை விட யார் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக அமைய வேண்டும். 

ஜனநாயகத்தை  பாதுகாக்கும் தேர்தல் 

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்துக்காக நடக்கும் தேர்தல் சடங்கு அல்ல 2024 நாடாளுமன்றத் தேர்தல். இந்தியாவில் ஜனநாயக அமைப்பு முறையையும் இந்தியாவில் கூட்டாட்சிக் கருத்தியலையும் காப்பாற்றுவதற்காக, இந்தியா முழுவதும் உள்ள பாஜக வுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள்,  மாறுபாடுகளை மறந்து இந்தியாவைக் காப்பாற்ற ஒன்று சேர்ந்தாக வேண்டும்.  மதவாத, பாசிசவாத, எதேச்சதிகார பாஜகவை வீழ்த்துவதற்கு ஜனநாயக சக்தி கள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டுமே தவிர, தேவையற்ற முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது. பிரி வினைகளால் பாஜக வெல்லப் பார்க்கும். சாதியால், மதத்தால் பிரிவினையை விதைக்கும் அந்தக் கட்சி, அரசியல் கட்சிகளின் முரண்பாடுகளின் மூலம் வெல்லப் பார்க்கும். அதற்கு அகில இந்தியத் தலைவர்கள், மாநிலக் கட்சித்  தலைவர்கள் மாநிலங்களின் முத லமைச்சர்கள் யாரும் இரையாகி விடக் கூடாது என்றார். 

எத்தகைய பொய்யையும் சொல்ல பாஜகவினர் தயங்கமாட்டார்கள். அவதூறுகளை அள்ளி வீசவும் அதனைப் பரப்பவும் பாஜகவிடம் ஏவலுக்கு கீழ்ப்படி யவும் சிந்தனையற்ற, வெறுப்புணர்ச்சி யால் மழுங்கடிக்கப்பட்ட ஒரு கூட்டம் இருக்கிறது. அதற்குத் தமிழ்நாட்டில் ஆளுந ராக இருக்கும் அவர் செய்து கொண்டி ருக்கும் சித்து விளையாட்டுகளை எல்லாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 

ஜனநாயகத் திருவிழா

பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் என்ற அந்த உணர்ச்சியோடு இன்று நாங்கள் கிளம்பி இருக்கிறோம். எதை வேண்டுமானாலும் பேசட்டும், எங்க ளுக்குக் கவலை இல்லை. ஒற்றுமையின் மீது, சகோதரத்துவத்தின் மீது, மதச்சார்பின்மையின் மீது, உண்மையான வளர்ச்சியின் மீது, இந்த நாட்டின் மீது  நம்பிக்கை வைத்துள்ள மக்கள், நம்மோடு இருக்கிறார்கள். நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே நமது  உள்ளத்தை ஒற்றுமையால் கட்டமைப் போம். கலைஞரின் நூற்றாண்டு விழாக்  கொண்டாட்டங்களோடு இந்திய ஜனநாயக திருவிழாவையும் நாம் கொண்டாடும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நமக்காக அல்ல, நாட்டிற்காக, ஜனநா யகத்தைக் காப்பாற்றுவதற்காக நடை பெறும் தேர்தல் என்பதை மனதில் வைத்து, இந்த விழாவில் உறுதி எடுப்போம், சபதம் ஏற்போம். அதுதான் தலைவர் கலைஞருக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும், பெருமை சேர்க்கும் என்றார் மு.க.ஸ்டாலின்.