சென்னை,அக்.22- மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் வேதனையிலிருந்து மக்கள் விடுபட நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தி, ‘இந்தியா’ கூட்டணியை வெற்றி பெறச் செய்வதே ஒரே தீர்வு என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்: பிரதமர் மோடி தலைமையில் கடந்த 9 ஆண்டுகளுக்குமேல் நடை பெற்றுவரும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியில் அதிகமான குளறுபடி களுக்கும், குழப்பங்களுக்கும், ஆளுமை யில் பஞ்சமே இல்லை என்று குறிப்பிட் டுள்ளார். திடீர் பணமதிப்பிழப்பு அறிவிப்பு, 2000 ரூபாய் நோட்டுமூலம் கருப்புப் பண ஒழிப்பு என்று அறிவித்து, 10 ஆண்டு ஆட்சிப் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே கூட அதே ஆட்சியால் புதிய 2000 ரூபாய் நோட்டு களையும் திரும்பப் பெற்றது தோல்வியின் ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமல்ல; குழப்பத்தின் உச்ச வெளிப்பாடு. மருத்துவத் துறையில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி ஆயுர் வேதத்தையே உயர்த்தித் தூக்கிப் பிடித்து, வேத காலத் திற்கு நாட்டை திரும்பவும் பின்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமென்பதற்காக பல அபத்த ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. நீட்’ தேர்வு என்ற ஒன்றினைக் கொண்டு வந்து, மாநில உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கிறது.
புதிய தேசிய கல்விக் கொள்கை என்ற மநுதர்மக் கல்விக் கொள்கை படமெடுத்தாடும் நிலை யில், பள்ளிகளில் தொடர் தேர்வுகள், கல்லூரிகளில் சேர நெக்ஸ்ட் தேர்வு, ‘நீட்’ அது ‘க்யூட்’ தேர்வு இப்படி ஒரே ‘கல்விக் குமட்டலை’ மாணவர்களிடையே பரப்புவதோடு, கீழ் சாதியினர் எனப்படு வோர் பயிலுகின்ற பள்ளிகளை குலத் தொழில் செய்யப் பயிற்சி பெற வேண்டுமாம். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோன்று மருத்துவத்தில் ஆன்மிக சிகிச்சைப் படிப்பு புதிய முறை திணிப்பாம் - பிரார்த்தனை மூலமே நோயை குணப்படுத்தும் Spiritual Medical Education என்ற அபத்தத் திட்டம்! மதவாதிகளும், மந்திரவாதிகளும்தான் இனி மருத்துவப் பேராசிரியர்களாக இருக்கும் தகுதி படைத்தவர்களாக இருப் பார்கள் போலும்! என்று உலகத்தவர் கைகொட்டி சிரிப்பர். இதற்கு ஒரே தீர்வு (One Point Programme) வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்பதுடன், பா.ஜ.க. வை படுதோல்வி அடையச் செய்தால் மட்டுமே நாட்டினை மக்கள் விரோத ஆட்சியின் அலங்கோலத்திலிருந்து காப்பாற்ற முடியும். மோடி அரசின் வேதனைகள் குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு பிர்ச்சாரத்தை மேற்கொள்ளவேண்டும். வீடு வீடாக வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து விழிப்படையச் செய்தால்தான் ‘விடியல் ஏற்படும்‘ என வீரமணி கூறியுள்ளார்.