81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க் கண்டில் இரண்டு கட்டமாகவும் (நவ., 13 மற்றும் 20), 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே கட்டமாகவும் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த இரண்டு சட்ட மன்ற தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடவில்லை என அறிவித்தது. எனினும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் “இந்தியா” கூட்டணிக்கு ஆதரவாக செயல் படும் என ஆம் ஆத்மி அறிவித்தது. இந்நிலையில், ஆம் ஆத்மி ஒருங்கி ணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்களில் “இந்தியா” கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.