states

img

கன்னியாகுமரி: சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கவசத்துடன் படகு சவாரி

நாகர்கோவில், மே 28-   குமரி முனையில் புதிதாக இயக்கப்படும் சுற்றுலா படகில் பாது காப்பு கவசங்களுடன் (லைப் ஜாக்கட்)  பயணிக்க மாவட்ட ஆட்சியர் நட வடிக்கை மேற்கொண்டார்.  இதற்கு சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சுற்றுலா படகு களை இயக்கி வருகிறது. ஏற்கனவே விவேகாந்தர் பாறைக்கும் திரு வள்ளுவர் சிலைக்கும் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாக திருவள்ளுவர், தாமிரபரணி என்ற பெயர் கொண்ட 2 சுற்றுலா சொகுசு படகுகள் வட்டக் கோட்டைக்கு இயக்கப்பட்டு வரு கின்றன. சுமார் ரூ.8.24 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சுற்றுலா படகுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.   தாமிரபரணி நவீன சொகுசு படகில் குளிர்சாதன வசதியுடன் 75 சுற்றுலா பயணிகள் அமரும் வகை யில் இருக்கை வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

மேலும் திருவள்ளுவர் நவீன சொகுசு படகில் குளிர்சாதன வசதி யுடன் 19 சுற்றுலா பயணிகள் அம ரும் வகையிலும், 131 பயணிகள் சாதா ரண இருக்கைகளுடன் பயணம் செய் வதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு நவீன சொகுசு படகுகளின் மொத்த மதிப்பு ரூ.8.24 கோடி ஆகும். குளிர்சாதன இருக்கையில் பயணம் மேற்கொள்ளும் ஒரு நபருக்கு ரூ.450ம், சாதாரண இருக்கையில் அமர்ந்து பயணம் மேற்கொள்ளும் ஒரு நபருக்கு ரூ.350 ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு படகுகளும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தளத்தில் இருந்து புறப்பட்டு, சின்ன முட்டம் வழி யாக வட்டக்கோட்டை கடல் பகுதி யை சென்றடைந்து மீண்டும் பூம்புகார்  கப்பல் போக்குவரத்து கழக தளத்திற்கு வந்து சேரும். இந்நிலையில் திருவள்ளுவர், தாமிரபரணி நவீன சொகுசு படகில்  பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பய ணிகள் தகுந்த பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் பயணம் செய்வதாக தீக்கதிர் உள்ளிட்ட பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, நவீன சொகுசு படகில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு கவசங்கள் (லைப் ஜாக்கட்) வழங்கப் பட்டுள்ளன. பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுத்த  மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதருக்கு சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்தனர்.