states

மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி குறைப்பை கண்டித்து ஜூலை 10 - தில்லியில் தர்ணா

திருப்பூர், ஏப்.16- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் ஞாயிறன்று திருப்பூரில் நடை பெற்றது.  சங்கத்தின் மாநிலத் தலைவர் வில்சன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன், மாநில பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி, மாநிலப் பொருளாளர் சக்கரவர்த்தி, அகில இந்திய கமிட்டி உறுப்பினர்கள் ஜீவா, பாரதி அண்ணா உள்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் சங்க கோரிக்கை யை ஏற்று சட்டமன்ற நிகழ்ச்சிகளை சைகை மொழியிலும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்து கொடுத்திருக்கும் தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்ததை கண்டித்தும், கடந்த 11 ஆண்டு களாக உயர்த்தப்படாமல் ரூபாய் 300 ஆக இருக்கும் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையை அதிகரிக்க வலியுறுத்தியும், 100 நாள் திட்ட வேலையையும், கூலியை யும் அதிகரிக்க வலியுறுத்தியும், மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில் பயணத்தில் அனைத்து தடங்கல்களை நீக்க  நடவடிக்கை எடுக்க கோரியும், அனைத்து மாற்றுத்திற னாளிகளுக்கும் ஏ.ஏ.ஓய் குடும்ப அட்டை வழங்குவதை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் ஜூலை 10 அன்று தில்லியில் நாடாளுமன்றம் நோக்கி தர்ணா போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் தமிழ்நாட்டிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் பங்கேற்கவும் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாட்டில்  இந்த ஆண்டு 100 நாள் வேலை கேட்டு மே 9 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் மனு கொடுக்கும் இயக்கம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், அண்ணல் அம்பேத்கர் விருது பெற்ற பாரதி அண்ணா அந்த விருதுத் தொகை ரூபாய் 5 ஆயிரத்தை சங்க வளர்ச்சிக்கு ஒப்படைத்தார்.