திருநெல்வேலி, நவ.8 - வற்றாத ஜீவ நதியான தாமிர பரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் கடுமையாக மாசுபட்டு வருகிறது என்று பல்வேறு தரப்பினரும் வேத னையுடன் புகார் கூறி வருகின்றனர். இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், தாமிரபரணி ஆற்றில் மாசு கலப்பதை தடுக்க உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதிகாரிகள் அதனை வேடிக்கைப் பார்த்து வருகின்றனர் எனவும் சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். நெல்லை தாமிரபரணி ஆற்றில் பழமையான படித்துறைகள், மண்ட பங்கள் சிதிலமடைந்து வருகின்றன. இவற்றை பழமை மாறாமல் சீர மைத்து பராமரிக்கவும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொட ரப்பட்டது. இந்த மனு சமீபத்தில் நீதி பதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், புக ழேந்தி அமர்வு முன்பாக விசார ணைக்கு வந்தது. இந்த வழக்கில் நெல்லை மாநக ராட்சி ஆணையர் சுகபுத்ரா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப் போது அவர், “மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதியில் கழிவு நீர் கலப்ப தை பல கட்டங்களாக தடுத்து வரு கிறோம். 2 ஆவது கட்டம் வருகிற டிசம்பர் மாதம் நிறைவடைந்து விடும். 3 ஆவது கட்டம் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடையும்” என உறுதி கூறினார். மேலும் மாநக ரப் பகுதியில் மொத்தம் 17 இடங்களில் தாமிரபரணி ஆற்றில் நேரடியாக கழி வுநீர் கலப்பதாகவும், மாநகராட்சி தரப்பில் ஒத்துக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள், “நவ.10 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நாங்கள் (நீதிபதிகள்) நெல்லை மாந கராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் பகுதிகளையும் என பல்வேறு பகுதி களை நேரில் வந்து கள ஆய்வு செய்ய உள்ளோம். அன்றைய தினம் அனைத்து அதிகாரிகளும் அங்கு இருக்க வேண்டும்” என்று உத்தர விட்டு, இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தெரி வித்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நீதிபதிகள் வருவதையொட்டி, நெல்லை மாநகராட்சி சார்பில் தாமிர பரணி ஆற்றங்கரையோரம் சாக்கடை கழிவு நீர் கலக்கும் பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.மேலப்பாளையம், தச்சநல்லூர் மண்டலத்துக்கு உட் பட்ட பகுதிகளில் மாநகராட்சி அதி காரிகள் மேற்பார்வையில், தூய்மை பணியாளர்கள் அந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றுக்குச் செல்லும் வழி பாதைகளில் உள்ள மண் குவியல் களை அப்புறப்படுத்துதல், முட்செடி களை வெட்டி அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்ற னர். மேலும் குடியிருப்பு பகுதிகளி லிருந்து தாமிரபரணி ஆற்றில் நேரடியாக கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் அமைக்கப் பட்டிருந்த ஜல்லி நிரப்பிய தொட்டிகள் சேதமடைந்த நிலையில், அவற்றை புதுப்பித்து அவற்றில் புதிதாக ஜல்லிகளை நிரப்பி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.