states

ஜோஷிமத் நகரம் மண்ணில் புதையும் அபாயம்!

அழிவுக்கு வழிவகுத்த கார்ப்பரேட் கொள்ளை!

இந்தியாவில் பருவநிலை மாறுபாடு, நகரமயம் காரணமாக நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை சந்திக்கும் மாநிலங்களில் முதன்மையான ஒன்றாக உத்தரகண்ட் மாநிலம் தொடர்ந்து இருந்து வருகிறது.  கடந்த 1970-ஆம் ஆண்டில் உத்தர கண்டில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக அலக்நந்தா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஏராளமான கிராமங்கள் மூழ்கின. இதன் விளை வாக இயற்கை வளங்களை பாதுகாக்க கடந்த  1980-களில் சிப்கோ இயக்கத்தை மக்கள் உரு வாக்கினர். எனினும், கார்ப்பரேட் நிறுவனங்கள் அந்தப் பகுதியில் தொடர்ந்து இயற்கை வளங் களை சுரண்டி வருகின்றன. இதனால், கடந்த 1991-இல் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 768 பேர் உயிரிழந்தனர். 1998-இல் மால்பா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 255 பேர் உயிரிழந்தனர். 1999-இல் சமோலி யில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100 பேர் உயிரி ழந்தனர்.

கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூனிலும் மேக வெடிப்பால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு, 5,700 பேர் உயிரிழந்தனர். கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் பனிப்பாறைகளில் வெடிப்பு ஏற்பட்டு தபோவன் அணையில் கட்டப்பட்டிருந்த விஷ்ணுகாட் நீர் மின் நிலை யமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் 83 பேர் உயிரிழந்தனர். இதன்பிறகும் தேசிய அனல் மின் நிறு வனம் சார்பில் தபோவன் அணையில் விஷ்ணு காட் நீர் மின் நிலைய திட்டப் பணிகள் தீவி ரப்படுத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக ரிஷி கேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜோஷிமத் நகருக்கு அடியில் 16 கி.மீ. தொலைவுக்கு சுரங்கம் அமைக்கப்பட்டது. இந்த சுரங்கத்தில் உயரழுத்தம் கொண்ட வாயு உருவாகி மேற்பகுதி நிலப்பரப்பில் வெடிப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வெளியாகி வந்தன. அதன் தொடர்ச்சியாகவே தற்போது ஜோஷிமத் மக்களின் வீடுகள், கட்டடங்கள் விரிசல் காணத் துவங்கியுள்ளன. ஜோஷிமத் நகரமே பேரழிவின் விளிம்பில் நிற்கிறது.

டேராடூன், ஜன.7- உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமத் நக ரத்தில் நிலச்சரிவு காரணமாக, வீடுகள், கட்ட டங்கள் மண்ணிற்குள் புதையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 600-க்கும் மேற்பட்ட வீடுகள், சாலைகள் விரிசல் கண்டுவரும் நிலையில், அங்குள்ள குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்ல உத்தரவிடப் பட்டு உள்ளது. உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டம் ரிஷிகேஷ், பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுற்றுலா நகரம் ஜோஷிமத். தரைப் பகுதியில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் இமயமலையின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த நகரம் ‘இமயமலை நகரம்’ என்றே அழைக்கப்படுகிறது.  இந்திய தரநிலைகள் பணியகம் நாட்டை நான்கு நில அதிர்வு மண்டலங்களாகப் பிரிக்கி றது. மண்டலம்-II, மண்டலம்-III, மண்டலம்-IV மற்றும் மண்டலம்-V ஆகியவையே இந்த  நில அதிர்வு மண்டலங்களாகும். இந்த நான்கு  மண்டலங்களிலும், மண்டலம்-V-தான் மிகத்  தீவிரமான அதிர்வு ஆபத்தைக் கொண்டதா கும். அந்த வகையில், ஜோஷிமத் நகரம், அதிக  ஆபத்துள்ள நில அதிர்வு மண்டலம்-V-இல் உள்ளதாகும்.

இந்நிலையில்தான், வரலாற்றுப் புகழ்பெற்ற ஜோஷிமத் நகரம்தான் தற்போது நிலநடுக்கத்தால் எந்தநேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற ஆபத்திற்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த சில நாட்களாக, ஜோஷிமத் நக ரத்தில் சாலைகள், வீடுகள், கோயில்கள், கட்ட டங்கள் விரிசல் காணத் துவங்கியுள்ளன. கடந்த  2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஜோஷிமத் பகுதியில் 16 ஆயிரத்து 709 பேர்  களும், சுமார் 7 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட  வீடுகள், கடைகளும் உள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக ஜோஷிமத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவெடிப்பும், வீடுகளில் விரி சலும் ஏற்பட்டு வருகின்றன. ஜோஷிமத் நக ராட்சிக்கு உட்பட்ட 9 வார்டுகளில் நில வெடிப்பு மோசமாக உள்ளது. சுமார் 570 வீடுகளில் மிகப்பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.  சாமோலி நிர்வாகம் வழங்கிய தரவு களின்படி, ரவிகிராமில் 153, காந்திநகரில் 127,  மனோகர் பாக்கில் 71, சிங்தாரில் 52, பர்சாரி யில் 50, அப்பர் பஜாரில் 29, சுனீல் பகுதி யில் 27 என நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 561 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஜோஷிமத்தில் ஏராளமான ஹோம்ஸ்டேகள் மற்றும் ஹோட்டல்களும் சேதமடைந்துள்ளன. சில இடங்கள் அப்படியே மண்ணில் புதைய ஆரம்பித்துள்ளன. இது மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஜோஷி மத் மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு வெளியேறி வருகின்றனர். 

நிலவெடிப்பு, வீடுகள் விரிசல் ஏற்படுவதாக 3 நாட்களுக்கும் மேலாக மக்கள் புலம்பி வந்த நிலையில், புஷ்கர் சிங் தாமி தலைமை யிலான உத்தரகண்ட் மாநில பாஜக அரசு, மிகுந்த அலட்சியத்துடன் இருந்துள்ளது. மக்க ளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்துள்ளது. இதனால் ஆவேசமடைந்த ஜோஷிமத் மக்கள் உத்தர கண்ட் பாஜக அரசைக் கண்டித்து, நகர வீதி களில் தீப்பந்த ஊர்வலம் நடத்தினர். தங்க ளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். இதன்பிறகே, உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டிய புஷ்கர் சிங் தாமி, தற்போது இடியும் வீடுகளில் இருந்து மக்களை வெளி யேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டுள்ளார். அதி காரிகளும், மக்களை பாதுகாப்பான இடங்க ளுக்கு மாற்றும் பணியை தொடங்கியுள்ளனர். மெல்ல புதைந்து வரும் ஜோஷிமத் நகரத்தை பேரிடர் மேலாண்படையினர் தீவிரமாக கண்கா ணித்து வருகின்றனர். மீட்பு பணிகளுக்காக ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளன. முதல்வர் புஷ்கர்  சிங் தாமியும் சனிக்கிழமையன்று ஜோஷி மத்திற்குச் சென்று, நிலைமைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.