states

img

ஐடிஐ தொகுப்பூதிய பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி உண்ணாநிலை

சென்னை, மே 27- தொழிற்பயிற்சி நிலையங்களில் பணியாற்றும் பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் சார்பில் சென்னையில் சனிக்கிழமை (மே 27) உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எம்.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் நடராஜன் போராட்டத்தை துவக்கி வைத்தார். பொதுச்செயலாளர் என்.ரமேஷ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சிஐடியு மாநில துணைத் தலைவர் இ.பொன்முடி அரசு ஊழியர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கலைச் செல்வி, வட சென்னை மாவட்டத் தலைவர் வி.விஜயகுமரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலத் தலைவர் மு.அன்பரசு போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். சங்கத்தின் மாநிலப் பொருளாளர் என்.திருநாவுக்கரசு நன்றி  கூறினார். அரசினர் தொழிற்பயிற்சி நிலை யங்களில் பொது மற்றும் தனியார் கூட்டாண்மை, சென்டர் ஆப் எக்ஸ் லென்சி, கைவினைஞர்கள் பயிற்சி ஆகிய பிரிவுகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பயிற்றுனர்கள் மற்றும் உதவியாளர்களை தேர்தல் கால வாக்குறுதியின் படி முதலமைச்சர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தலை வர்கள் வலியுறுத்தினர். இதற்கிடையே தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவ ராவ், கூடுதல் இயக்குநர் ரவிச்சந்திரன் ஆகியோரை சங்க நிர்வாகிகள் சீனிவாசன், ரமேஷ், திருநாவுக்காரசு, பி.நடராஜன், அமரேசன் ஆகியோர் சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது கோரிக்கைகள் பரி சீலனையில் உள்ளது என்றும், செய லாளரிடம் கலந்து பேசி முதல மைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என்று தெரி வித்துள்ளனர். மேலும் பயிற்று நர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதி யத்தில் உள்ள வேறுபாடுகள் களையப்பட்டு விரைவில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என எழுத்து மூலமாக தெரிவித்துள்ளனர் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.