புதுதில்லி, ஜூலை 19 - பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான 8 ஆண்டுகால பாஜக ஆட்சி யில் அமெரிக்க டாலருக்கு இணை யான இந்திய ரூபாயின் மதிப்பு 25 சத விகிதம் அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த தகவலை ஒன்றிய பாஜக அரசே நாடாளுமன்றத்தில் தற்போது ஒப்புக் கொண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு இணை யான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவதைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. மேலும், நாடாளுமன்ற மக்களவையிலும் காங்கிரஸ் உறுப்பி னர்கள் தீபக் பைஜ் மற்றும் விஜய் வசந்த் ஆகியோர் ரூபாய் மதிப்பு தொடர் பாக கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது பதில ளித்துள்ளார். அதில், “ரஷ்ய - உக் ரைன் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலக நிதி நிலைமை கள் இறுக்கம் போன்ற உலகளாவிய காரணிகள் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுக்கு காரணம். மேலும், அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்கு களில் இருந்து சுமார் 1,400 கோடி டாலர்களை திரும்ப பெற்றதும் ஒரு காரணம். 2014 டிசம்பர் 31-ஆம் தேதியன்று அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 63 ரூபாய் 33 காசுகளாக இருந்தது. இது 2022 ஜூலை 11-ஆம் தேதியன்று 79 ரூபாய் 41 காசுகளானது. கடந்த 8 ஆண்டுகளில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 16 ரூபாய் 08 காசுகள் (25.39 சத விகிதம்) வீழ்ச்சி கண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு 77 ரூபாயாக சரிந்த தற்கு பின்பு மீண்டும் மேலே வர வில்லை. டாலருக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போவதால், ரூபாய் மதிப்பும் சரிந்து கொண்டே செல்கிறது. வர்த்தக வாரத் தின் முதல் நாளான திங்களன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது ஒரு டாலர் 79 ரூபாய் 75 காசு களாக இருந்தது. டாலருக்கான தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து ஒரு டாலரின் மாற்று மதிப்பு 79 ரூபாய் 98 காசுகள் என்ற உச்சத்தை தொட்டது. இதனிடையே செவ்வாயன்றும் ரூபாய் மதிப்பு 80 ரூபாய் 05 காசுகள் அளவிற்கு வீழ்ச்சி கண்டது. இது மேலும், வீழ்ச்சி காணலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கணிக் கின்றனர். இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த 7 அமர்வுகளாகவே வீழ்ச்சி கண்டு வருகின்றது. நடப்பு 2022-ஆம் ஆண்டில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பானது 7.5 சதவிகிதம் சரி வைக் கண்டுள்ளது. ரூபாயின் சரிவா னது, பணவீக்கம், வர்த்தக பற்றாக் குறையை மேலும் அதிகரிக்கும், இந் தியா எதிர்கொள்ளும் மிக முக்கியப் பிரச்சனைகளாக பணவீக்கம், வர்த்த கப் பற்றாக்குறை மாறும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்ற னர்.
இந்தியா அதன் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவிகிதத்தை இறக்குமதி மூலமே பெறுகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலர்களுக்கு அரு கில் உள்ளதால், இது இன்னும் பண வீக்கத்திற்கு வழிவகுக்கலாம். இறக்குமதி பொருட்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக் கும். இதனால் இறக்குமதி பொருட்க ளின் விலை அதிகரிக்கலாம். உதா ரணத்திற்கு கச்சா எண்ணெய் விலை, உதிரி பாகங்கள், மின்னணு பொருட் கள், சமையல் எண்ணெய், உரங்கள், மருத்துவ மூல பொருட்கள் உள்ளிட்ட பலவற்றின் விலை அதிகரிக்கலாம். தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தினால் மக்களின் வாங் கும் திறன் குறையலாம். இது தேவை யில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். தேவை குறைந்தால் அது இந்தியா வின் பொருளாதார வளர்ச்சியில் தாக் கத்தை ஏற்படுத்தும் என்றும் சந்தை வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.