வாட்ஸ் அப் பயனர்களை உளவு பார்க்கும் இஸ்ரேல்
‘வாட்ஸ் அப்’ பயனர்கள் உரையாடலை இஸ்ரேல் உளவு பார்த்து வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இஸ்ரேல் உளவு நிறுவனமான பாராகான் சொல்யூசன்ஸ் (Paragon Solutions) பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட முக்கியமான 90 வாட்ஸ் அப் பயனர்களை குறிவைத்து உளவு பார்ப்ப தாகக் கூறப்பட்டுள்ளது. மேற்கு நாடுகளின் சமூக வலைதளங்கள் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பிற்கு நேர்மையானவையல்ல என்ற விமர்சனம் உள்ளது ம் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து
அமெரிக்காவின் பிலடெல்ஃபியா நகரில் சிறிய ரக தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு அந்த விபத்து நடந்துள்ளது. இந்த விமான விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். குடியிருப்புகள், வணிக நிறுவ னங்கள் என அதிக மக்கள் உள்ள பகுதியில் இந்த விமா னம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. விபத்தில் பொதுமக்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனவும் குறிப்பிடப்படவில்லை.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக 7000 இந்திய மாணவர்கள் உள்ளனர்
அமெரிக்காவில் 7,000 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர் என அந்நாட்டின் குடியேற்றக் கல்வி மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில எப் 1 விசா வழங்ப் படுகிறது. இதேபோல கல்விச் சுற்றுலா வரும் வெளிநாட்டு மாணவ, மாணவியருக்கு எம் 1 விசா வழங்கப்படுகிறது. அமெரிக்கா வரும் மாணவர்கள் விசா காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இதில் மிக அதிகமாக 7,000-க்கும் மேற்பட்ட இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.