பாலஸ்தீனம் மீது குண்டுமழை: ரூ.37,350 கோடியை கொட்டிய இஸ்ரேல்
புதுதில்லி, அக். 26 - பாலஸ்தீனம் மீது கடந்த அக்டோபர் 7 முதல் கொடூரத் தாக்குதல் நடத்தி, குண்டு மழை பொழிந்துவரும் இஸ்ரேல், கடந்த 19 நாட்களில் ரூ. 37 ஆயிரத்து 350 கோடியை போருக்கு செலவிட்டுள்ளது. நாளொ ன்றுக்கு சுமார் 1 பில்லியன் ஷேக்கல்களை (ஸ்ரீ246 மில்லி யன் அல்லது ரூ.24.6 கோடி) போருக்காக செலவிட்டு வரு வதாக இஸ்ரேல் நிதியமை ச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் போர்: இந்தியா தலையிட வேண்டும்
புதுதில்லி, அக். 26 - “காசாவில் அப்பாவி குழந்தைகள் உடல் உறுப்பு கள் இழப்பதும் அவர்கள் தலை துண்டாவதுமான காட்சிகள் நிகழ்கின்றன. குடி மக்கள் கொல்லப்படுவது மாக மனிதத்துவமற்ற நெருக்கடியான சூழல் அங்கு நிலவுகிறது. அத னை பார்க்கும் போது இதயம் துடிப்பதுடன் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. எனவே, இந்தியா உட னடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும். துயரமான சூழலில் ஒரு தலைபட்சமாக இருப்பதற்கு இடம் கிடையாது” என ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சரும், மாநிலங் களவை உறுப்பினருமான கபில் சிபல் ‘எக்ஸ்’ பக்க த்தில் வலியுறுத்தியுள்ளார்.
50 அடியை நெருங்கியது மேட்டூர் நீர்மட்டம்!
சேலம், அக். 26 - அக்டோபர் 10 அன்று 30 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், வியாழனன்று 49.92 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 4 ஆயிரத்து 334 கன அடியிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 496 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 17.76 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு அக்டோபர் 10க்குப் பிறகு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது..
பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு
சென்னை, அக். 26 - பாஜகவுக்கு, தேர்தல் சின்னமாக தாமரை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை ரத்து செய்யவேண்டும் என்று நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சி யின் நிறுவன தலைவரு மான டி. ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி எனவும், நாட்டின் ஒருமைப் பாட்டை இழிவுபடுத்துவது ஆகும் என்றும் குறிப்பிட்டுள் ளார். இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் முறையிட் டும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் கூறியுள்ளார்.
உரிமைத் தொகை : 11 லட்சம் பேர் மேல்முறையீடு!
விருதுநகர், அக். 26 - கலைஞர் மகளிர் உரி மைத்தொகை திட்டத்தில் இணைய 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருப்ப தாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனுக்களை சார் ஆட்சியர், துணை ஆட்சியர், வரு வாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகின்றனர் என்றும், தகுதியான ஒரு மகளிர் கூட திட்டத்திலிருந்து விடுபட்டு விடக்கூடாது என அதிகாரிகளுக்கு அறி வுறுத்தியுள்ளதாகவும் உதய நிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள் ளார். முன்னதாக தகுதி பெறாத விண்ணப்பதாரர் களை தொடர்பு கொண்டு உதயநிதி பேசினார். தகுதியானவர்களுக்கு நவம்பர் 15 அன்று தொகை வரவு வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை
சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் ஒன்றிய அரசு
அரபு நாடான கத்தாரில் உள்ள அல்தஹ்ரா சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் கன்சல்டன்சி நிறுவனத்தில் இந்திய கடற்படையைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் 8 பேர் பணிபுரிந்தனர். 8 பேரும் இந்திய போர்க்கப்பலில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்கள் என்பதாலும், அவர்களின் வேலை திறனை கண்டு சந்தேகம் கொண்ட கத்தார் உளவுத்துறை 8 பேரையும் கைது செய்து தனிமைச் சிறையில் அடைத்தது. 2022 ஆகஸ்ட் மாதம் முதல் ஓராண்டுக்கு மேலாக தனிமைச் சிறையில் வாடிவரும் நிலையில், இந்த விவகாரம் தொடர் பாக கத்தார் நீதிமன்றம் வியாழ னன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் 8 பேருக்கும் மரணதண்டனை வழங்கி அறிவிக்கப்பட்டுள்ளது. 8 இந்தியர்களுக்கு மரண தண் டனை விதித்து கத்தார் நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிப் பதாக தெரிவித்துள்ள ஒன்றிய வெளி யுறவுத்துறை அமைச்சகம் விரிவான தீர்ப்பு கிடைத்ததும் உரிய சட்ட நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
சென்னை,அக்.26- டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத் திற்காக பலர் அறிய தொண்டாற்றி வருகிறார்கள். பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக் கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்க லாம். www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணைய தளத்திலிருந்து இவ்விருதுகள் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகம் சென்னை - 05 அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவல கத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம் என ஆதிதிரா விடர் நலத்துறை சார்பில் வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு
சென்னை, அக்.26- தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒரு நாள் உயர்வதும், மறுநாள் குறைவதும் என ஏற்ற இறக்க நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை வியாழனன்று (அக்.26) அதிரடியாக அதிகரித்தது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.45,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,700 -க்கு விற்பனை செய்யப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அடுத்த மாதம் 4 நாட்கள் முகாம்
சென்னை, அக்.26- தமிழ்நாட்டில் வாக்கா ளர் பட்டியலில் பெயர் சேர்க்க அடுத்த மாதம் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடை பெறுகிறது. இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதி காரி சத்யபிரத சாகு வெளி யிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெள்ளியன்று (அக்.27) வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக உரிய விண் ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தேர்தல் துறை அதி காரிகளிடம் அளிக்கலாம். விண்ணப்பப் படிவங் களை அளிக்க டிசம்பர் 9 ஆம் தேதி கடைசி நாளாகும். நவ. 4, 5 மற்றும் 18, 19 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் கள் நடைபெற உள்ளன. வாக்குச்சாவடி அமைவிடங் கள் நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கலுக்கு படிவங்களை அளிக்கலாம். இந்தப் படிவங்கள் அனைத்தும் பரிசீலிக்கப் பட்டு தகுதியுள்ள அனை வரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப் படுவார்கள். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.