அயோத்தி வழக்கின் தீர்ப்பு கடவுளின் அருளால் கிடைத்ததாக உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி ஒய்.எஸ்.சந்திரசூட் அண்மையில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்க வேண்டிய நீதிமன்றங்கள், கட வுள் நம்பிக்கையை முன்னிறுத்துவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு சட்டவிரோதமா னது என்று உச்சநீதிமன்றமே கண்டித்தி ருந்தாலும், அதே நிலத்தை இடித்தவர்க ளுக்கே வழங்கியது என்பது வலியோர் பக்கம் சாய்ந்த தீர்ப்பாகவே பார்க்கப் படுகிறது. இத்தகைய தீர்ப்புக்கு கடவு ளின் அருள் காரணம் எனில், கடவுளும் வலியோர் பக்கமே நிற்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. கியான்வாபி மசூதி, மதுரா மசூதி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தலைமை நீதிபதியின் இக்கருத்து எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கவலைக்குரியது. தனிநபர் நம்பிக்கைகள் வேறு, அர சியலமைப்பின் வழிகாட்டுதலில் இயங்க வேண்டிய நீதித்துறை வேறு என்பதை உணர வேண்டும். ராமர் கோயில் கட்டுமானத்திற்காக பல இந்து ஆலயங்களும் இடிக்கப்பட் டுள்ளன. அவற்றுக்கான வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அவற்றிலும் இதே போன்ற தீர்ப்புகள் வருமா என்ற ஐயம் எழுகிறது. அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகளில் இருவர் பின்னர் அரசியல் பதவிகளை ஏற்றது குறித் தும் கேள்விகள் எழுந்துள்ளன. பிரதமர் தன்னை கடவுள் அவதாரம் எனக் கூறு வதும், தலைமை நீதிபதி கடவுளின் அருளால் தீர்ப்பு என்பதும் மதச்சார் பின்மைக்கு எதிரானவை. நீதிதேவதையின் கண்களில் இருந்த கருப்புத் துணி அகற்றப்பட்டதைப் போல, நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையும் சிதைந்து விடக் கூடாது. மதச்சார்பின்மை என்ற அடித் தளத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு நீதித் துறைக்கு உண்டு என்பதை மறந்து விடக் கூடாது. -ஆர்.பத்ரி