சென்னை, மே 26- சட்டமன்ற தேர்தலின்போதே வருமான வரிச் சோதனையை எதிர் கொண்டோம். வருமான வரிச்சோ தனை ஒன்றும் எங்களுக்குப் புதிதல்ல என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரிச்சோதனை நடைபெற்று வரு கிறது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:- பாதுகாப்பைக் கேட்காமலேயே தமிழக காவல்துறையினர் எவ்வாறு பாதுகாப்பை வழங்குவார்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும், வருமான வரிச் சோதனை முடிவடைந்த பிறகு, முழு விவரங்களுடன் விளக்கம் அளிக்கி றேன். சட்டமன்ற தேர்தலின்போதே வருமான வரிச் சோதனையை எதிர் கொண்டோம். வருமான வரிச் சோதனை ஒன்றும் எங்களுக்குப் புதிதல்ல என்றும், வருமான வரிச் சோதனை நடத்தி வரும் அதிகாரி களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க ப்படும் என்றும் அமைச்சர் தெரிவித் துள்ளார். எனது சென்னை மற்றும் கரூர் வீடுகளில் சோதனை நடைபெற வில்லை. எனது சகோதரர் மற்றும் உற வினர்கள், நண்பர்கள் இல்லங்களில் சோதனை நடைபெற்று வருகிறது என்றார் அவர்.