states

கடந்த காலங்களில் முறையாக செய்யப்படவில்லை சொத்து வரி உயர்வை மறுசீராய்வு செய்க!

மதுரை, ஏப்.3- மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மிக அதிகமாக உயர்த்தப் பட்டுள்ள சொத்து வரியை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்றும் கடந்த காலங்களில் முறையாக செய்யப்படாததால், ஒரேடியாக உயர்த்துவது முறையாகாது. படிப்படியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக  சங்கத்தின் தலைவர் டாக்டர் என். ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழகத்தில் தொழில், வணிக வளர்ச்சி  மேம்பாடு அடையவும், வேலை வாய்ப்பு களை அதிகளவில் உருவாக்கவும், பள்ளி  மற்றும் உயர் கல்வித் துறை திறம்பட செயல்படவும், மாநிலத்தில் சுகாதார வளர்ச்சி மேம்பாடு அடையவும், ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வ தோடு, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும், நலத்திட்டங்களையும் அறிவித்து சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசை தொழில் வணிகத் துறையின் சார்பில், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வெகுவாகப் பாராட்டுகிறது. 

அதேவேளையில், 2022, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மாநகராட்சிகள், நகராட்சி கள் மற்றும் பேரூராட்சிகளில் மிக அதிக மாக சொத்து வரியை உயர்த்தியிருப்பது தொழில் வணிகத் துறையினரையும், பொது மக்களையும் மிகவும் அச்சத்திற்குள்ளாக்கி யுள்ளது. நகராட்சிகள் மற்றும் பேரூ ராட்சிகளில் 600 ச.அடிக்கு குறைவான பரப் பளவு உள்ள குடியிருப்புகளுக்கு 25 சத வீதம், 601 முதல் 1200 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்புகளுக்கு 50 சதவீதம், 1201 சதுர அடி முதல் 1800 சதுர அடி பரப்ப ளவு குடியிருப்புகளுக்கு 75 சதவீதம், 1800 ச. அடிக்கு அதிகமாக பரப்பு கொண்ட குடி யிருப்புகளுக்கு 100 சதவீதமும், வணிகப் பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவிகி தமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டுக் கட்டிடங்களுக்கு 75 சத விகிதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டு தமிழக அரசால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

வரி உயர்வால் வாடகை அதிகரிக்கும்

தொழில், வணிக நிறுவனங்கள் பெரும்பா லும் வாடகை கட்டிடங்களில் தான் செயல் பட்டு வருவதால் வாடகை கட்டிடங்களுக் கான சொத்து வரி உயர்வினால் வாடகை வெகுவாக அதிகரிக்கப்பட்டு, தொழில் வணிக நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். அரசுத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களில் பெரும் பகுதியினர் வாடகை கட்டிடங்களில் தான் குடியிருப்பதால், சொத்து வரி உயர்வால் வாடகை அதிகரித்து அவர்களும் பாதிக்கப் பட நேரிடும்.  கொரோனா நோய் தொற்று தாக்கத்தால் நாட்டில் நிலவும் பொருளாதார தேக்க நிலை காரணமாக மக்களிடம்  வாங்கும் சக்தி குறைந்து ஏற்கனவே பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் தொழில் வணிகத் துறை, கடுமை யான சொத்து வரி உயர்வால் மேலும் பாதிப்புக்குள்ளாகும்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்த் தொற்று ஊரடங்கால் தொழில் வணி கம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி சுமார் 22  சதவீத சிறு, குறு தொழில்கள் இன்னும்  முழுமையாகத் தொழிலை துவங்கவில்லை. பல்வேறு சிரமங்களுக்கு இடையே தொழில் வணிக நிறுவனங்கள் தற்போதுள்ள சொத்து வரியை செலுத்தி வந்துள்ளனர். கொரோனா அச்சம் இன்னும் முற்றிலும் விலகாத நிலையில் தமிழக அரசு நேற்று முதல் சொத்துவரியை சுமார் 100 முதல் 150 சதவீதம் வரை உயர்த்தி அறிவிப்பு செய்திருப்பதை தொழில் வணிக நிறு வனங்களால் தாங்க முடியாது.  பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையேற்றத்தால் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் வெகுவாக உயர்ந்துள்ள நிலையில் இந்த சொத்து வரி உயர்வு பொதுமக்களையும் வெகுவாகப் பாதிக்கும். 

கடந்த காலங்களில், குறைந்தது 3 அல்லது 5 வருடங்களுக்கு ஒருமுறை சொத்து வரி சீராய்வு முறையாக செய்யப்படாத கார ணத்தினால், தற்போது ஒரேடியாக சுமார் குறைந்தபட்சம் 25 சதவிகிதம் அதிகபட்சம் 150 சதவிகிதம் என சொத்து வரியை அரசு இந்த இக்கட்டான நேரத்தில் உயர்த்துவது முறையாகாது.  எனவே. தமிழக அரசு அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை மறு சீராய்வு செய்வதோடு, சொத்து வரி உயர்வைக் கணிசமாகக் குறைத்து, வரி உயர்வினை அதிகபட்சம் 30 சதவீதத்திற்கு மிகாமல் படிப்படியாக மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.   இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.