states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புலம்பெயரும் தொழி லாளர்களை முறைப் படுத்த எந்த தனிப்பட்ட திட்டமும் இல்லை என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது.
  2. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடும் பனி மூட்டம் காரணமாக பஸ்கள் நேருக்கு நேர்  மோதியதில் 8 பேர் பலி யாகியுள்ள நிலையில், 23 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
  3. திருப்பூர் மாவட்டம் அலகுமலை ஜல்லிக் கட்டு போட்டி வணிக  ரீதியாக நடத்தப்படுவ தால், அதற்கு அனுமதி வழங்கக்கூடாது என தடை கோரிய மனுவிற்கு ஆறு வாரத்தில் தகுந்த உத்தரவளிக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறி வுறுத்தியது.
  4. இந்தியாவை விட்டு  வெளியேறி மற்றவர்களு டன் பேச வேண்டும் என்றால் இந்தி மொழி உதவாது. எனவே ஆங்கிலம் படியுங்கள். ராஜஸ்தானில் இருக்கும் ஏழைகளின் பிள்ளைகள் அமெரிக்கர்களுடன் போட்டி போட்டு, அவர் களின் மொழியிலேயே வெல்ல வேண்டும் என்பதே எனது ஆசை. ராஜஸ்தானில் 1700 ஆங்கில வழிக்கல்வி பள்ளிக்கூடங்கள் திறக் கப்பட்டிருப்பது மகிழ்ச்சி  என காங்கிரஸ்  யாத்தி ரையில் ராகுல் காந்தி பேசினார்.
  5. இராமநாதபுரத்தில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் ரயில் வழித் தடத்தில், இராமநாதபுரம்  தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ரயி லில் அடிபட்டு சடல மாக மீட்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்ற னர். 
  6. கடல் சீற்றம் காரணமாக நாகை மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை  மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்ச ரிக்கை விடுத்துள்ளது.
  7. சென்னை மண்ணடியில்  டிசம்பர் 13 அன்று பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்துள்ள அப்துல்லா என்பவரிடம் என்ஐஏ அதிகாரிகள் என  கூறி ரூ.20 லட்சம் பண த்தை பறித்த வழக்கில் பாஜக நிர்வாகி உட்பட 6 பேர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரண டைந்தனர்.
  8. கம்போடியாவின் மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையிலும், மின் விநியோகத்தை சீர்படுத்தும் வகையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிலக்கரியைக் கொண்டு மின்னுற்பத்தியை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஹுவாடியன் பிரியா சிஹானோக் ஆலை தனது முழுமையான செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது. கம்போடியாவிலேயே பெரிய மின்னுற்பத்தி ஆலையான, இதை சீன உதவியுடன் நிறுவியிருக்கிறார்கள்.
  9. துனீசியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தல் வாக்குப்பதிவை பெரும்பாலான மக்கள் புறக்கணித்துள்ளனர். மொத்தம் 90 லட்சம் வாக்காளர்கள் உள்ள அந்த நாட்டில் வெறும் 9 விழுக்காடு மட்டுமே வாக்குப்பதிவு ஆகியுள்ளது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் இந்த முறைதான் இவ்வளவு குறைவாக வாக்குகள் பதிவாகியுள்ளன.  எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாகத் தேர்தலை புறக்கணித்ததால்தான் இந்த குறைவான வாக்குப்பதிவாகும்.
  10. ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பிலான பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் சென்ற வாகனம் தாக்கப்பட்டது. அதில் இருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளும், ஒரு பெண்ணும் கொல்லப்பட்டார்கள். அவர்களோடு இருந்த நான்கு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.