- கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய் தது என்று மோடி, அமித்ஷா கேட்கின்றனர். காங்கிரஸ் கடந்த 70 ஆண்டுகள் செயல்பட வில்லை யென்றால் நாம் இன்று ஜனநாயகத்தை பார்க்கமுடியாது என குஜ ராத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே பேசினார்.
- அரசியலமைப்பை முற்றி லும் அழித்துவிட்ட பாஜக விற்கு இந்தியா சொந்த மானது அல்ல. அரசிய லமைப்பு வழியாக இந்தி யாவுடன் காஷ்மீர் இணைக்கப்பட்டது என்ற சூழல் இருக்கும் நிலையில், காஷ்மீர் விவ காரத்திற்கு தீர்வு காணா தவரை எவ்வளவு வீரர் களை இங்கு அனுப்பினா லும் எந்த முடிவுகளும் எட்டப்படாது என மக் கள் ஜனநாயக கட்சி தலை வர் மெகபூபா முப்தி பேசினார்.
- இத்தாலியின் இஸ் கியா பகுதியில் திடீரென புரட்டியெடுத்த கனமழை யால் கடற்கரை பகுதியில் வித்தியாசமான முறை யில் நிலச்சரிவு ஏற்பட் டது. யாரும் எதிர்பார்க் காத வகையில் இந்த நிலச்சரிவுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளதாக வும் தகவல் வெளியாகி யுள்ளது
- உலகக்கோப்பை போட்டி யைக் காண பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 இளைஞர்கள் சைக்கி ளில் 7,000 கி.மீ தூரம் பய ணம் செய்து கத்தார் வந்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக கிளம்பிய மேக்தி பால மிசா மற்றும் கேப்ரியல் மார்ட்டின் ஆகிய இருவ ரும் சனியன்று நடை பெற்ற பிரான்ஸ் - டென் மார்க் அணியின் ஆட் டத்தை கண்டு ரசித்தனர்.
- ஊதிய கோரிக்கையை வலியுறுத்தி அமெரிக்க ரயில்வே ஊழியர்கள் வரும் டிசம்பர் 9-ஆம் தேதி முதல் வேலை நிறுத்த அறிவிப்பை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டனர். இந்நிலை யில் வேலை நிறுத்தத்தை தவிர்க்க ரயில்வே தொழிற்சங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக அமெ ரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தகவல் தெரிவித் துள்ளார்.
- மேற்கு வங்க மாநிலம் 24 பர்கான்ஸ் மாவட்டத்தின் மோமின்பாரா பகுதியில் திருமண வரவேற்பு குழு விற்கும், விழாவில் எழுப்பப்பட்ட இசைக்கு எதிர்ப்பு தெரிவித்த உள் ளூர் மக்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட் டது. இதில் ஒரு குழு நாட்டு வெடிகுண்டு வீசி யதில் 5 பேர் படுகாயம டைந்துள்ளனர்.
- குஜராத் மாநிலத்திற்காக பாஜக செயல்படாத சூழ் நிலையால் ஒவ்வொரு தெருக்களிலும் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்யும் நிலை உருவாகியுள்ளது. 135 பேர் இறந்த மோர்பி சம்பவத்தில் ஆளும் பாஜக இதுவரை எந்த விசா ரணையும் நடத்தவில்லை. எங்களுக்கு (காங்கிரஸ்) வாக்களித்தால் பாஜக சுய பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற் படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெடியாபாடா பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.