கனடா தூதர்களை வெளியேற்ற இந்தியா தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது நிலையில், இந்த முடிவு “சர்வதேச உறவுகளை மிகவும் ஆபத்தான தாக்குகிறது” என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதை தொடர்ந்து, இந்தியா - கனடாவிற்கு இடையே யான சர்வதேச உறவுகள் மோசமடைந்து வருகின்றன. இந்நிலையில் 40 க்கும் மேற்பட்ட தூதர்களை இந்தியா வெளி யேற்ற தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது. இம்முடிவு “சர்வதேச உறவுகளை மிகவும் ஆபத்தானதாக்குவதோடு, சர்வதேச சட்டத்தை மீறியதற்காக உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் பொறுப்பேற்காத போது, அந்தச் சூழ்நிலை அனைத்து நாடுகளுக்கும் பாதுகாப்பின்மை மற்றும் ஆபத்தை அதி கரிக்க வழிவகுக்கும் என ட்ரூடோ கவலை தெரிவித்துள்ளார். மேலும் நிஜார் கொலையில் உண்மைத் தன்மையை கண்டறிய இணைந்து பணி யாற்றுமாறு இந்தியாவிடம் கனடா கோரிக்கை விடுத்துள்ளது. “எங்கள் கண் ணோட்டத்தில் இதைப் பற்றி சிந்தியுங்கள். கனடா மண்ணில் கனடா குடிமகன் கொல்லப் பட்டதில் இந்திய அரசின் ஏஜெண்டுகள் ஈடு பட்டிருக்கலாம் என நாங்கள் நம்புவதற்கு (கூறுவதற்கு) எங்களிடம் முக்கியமான காரணங்கள் உள்ளன. இதற்காக மொத்த கனடா தூதர்களை வெளியேற்றும் இந்தியா வின் முடிவு வியன்னா உடன்படிக்கையின் கீழ் அவர்களின் உரிமைகளை மீறுவதாகும். ஒரு நாடு மற்றொரு நாட்டின் தூதர்களை இனி பாதுகாக்க போவதில்லை என முடிவு செய்தால், அது சர்வதேச உறவுகளை மிகவும் ஆபத்தானதாகவும் தீவிரமானதாகவும் ஆக்கும்.” இது உலகெங்கிலும் உள்ள நாடு களுக்கு கவலை அளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.