states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தமிழகத்தின் 35 இடங்களில்  வருமான வரி சோதனை

சென்னை, நவ.2- தமிழகம் முழுவதிலும் பல்வேறு ஜவுளிக் குழுமங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் என மொத்தமாக 35 இடங்களில் கே.வி.டெக்ஸ்டைல்ஸ், சிவா டெக்ஸ்டைல்ஸ், கன்னிகா பரமேஸ்வரி, மகாலட்சுமி மற்றும் மேக்னா குழுமங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. தீபாவளி பண்டிகையின் போது நடந்த விற்பனையை முறையாக கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வாகன மாசுபாட்டை குறைக்க வீட்டில் இருந்தே வேலை: தில்லி அரசு

புதுதில்லி, நவ.2- தில்லியில் வாகன மாசுபாட்டை குறைக்க மக்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். அரசியல் மூலம் காற்று மாசு பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. காற்றின்  தர மேலாண்மை ஆணையத்தின் திட்டம் உத்தரப்பிரதேசம், ஹரியானாவிலும் செயல்படுத்தப்பட வேண்டும். இந்த  விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறது. விவசாயிகளை துன்புறுத்துவதையும், துஷ்பிரயோகம் செய்வதையும் ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும் என்று தில்லி சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

கார் வெடிப்பு சம்பவம்  அப்சர் கானின் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை

கோவை, நவ.2- கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொட ர்புடையவராக கருதப்படும், திருச்சியைச் சேர்ந்த அப்துல் முத்தலிப் வீட்டில், காவல் துறையினர் புதனன்று சோதனை மேற்கொண்டனர். என்.ஐ.ஏ அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, ஏர்போர்ட் ஸ்டார் நகரில் உள்ள அவரின் வீட்டில், 30- க்கும் மேற்பட்ட காவல்துறை யினர் சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது.

சட்டவிரோத சுரங்க வழக்கு ஜார்க்கண்ட் முதல்வருக்கு  அமலாக்கத்துறை சம்மன்

ராஞ்சி, நவ.2-  ஜார்க்கண்ட் சட்டவிரோத சுரங்க வழக்கில் பணமோசடி தொடர்பாக வியாழ னன்று (நவம்பர் 3) விசாரணைக்கு ஆஜராகும் படி அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது. மாநிலத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்ட அனுமதி வழங்கியது தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஹேமந்த் சோரனிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.  நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக ஹேமந்த் சோரன் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா உள்ளிட்ட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். பங்கஜ் மிஸ்ரா வீட்டில் ஹேமந்த்  சோரன் கையெழுத்திட்ட காசோலைகள் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் கைப்பற்ற ப்பட்டுள்ளதால், முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சுரங்க குத்தகை குற்றச்சாட்டு தொடர்பாக, ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை தகுதி நீக்கம்  செய்ய தேர்தல் ஆணையம், அம்மாநில ஆளுநர் ரமேஷ் பயாஸ்-க்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நாகூர் தர்காவுக்கு  45 கிலோ சந்தனக்கட்டை

சென்னை, நவ.2- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதனன்று(நவ.2) தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டை களை தமிழ்நாடு அரசு கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் எஸ்.செய்யது காமில் சாஹிப் மற்றும் தர்கா தலைவர் எஸ். செய்யது முஹம்மது  கலீபா சாஹிப் காதிரி ஹாசிமி மற்றும் அறங்காவலர் ஹாஜா நஜிமுதின் சாஹிப் ஆகியோரிடம் வழங்கினார்.  நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு அரசு வனத்துறையின் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்கி வருகின்றது. 2023 ஆம் ஆண்டிற்கும் சந்தனக்கட்டை களை வழங்குமாறு தமிழ்நாடு வக்ப் வாரியம் கோரிக்கை விடுத்தது. இதை பரிசீலனை செய்த முதலமைச்சர் அதற்கான அரசாணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா  சாஹூ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பாஜகவின் ஊதுகுழலாக செயல்படும் ஆளுநர்: வைகோ சாடல்

சென்னை, நவ.2- தமிழக அரசால் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களை அனுப்பி வைக்கா மல், கிடப்பில் போட்டு வைத்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்ட ணிக் கட்சிகள் சார்பில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தில் கையெழுத்திடுவதற் காக மதிமுக பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான வைகோ புதனன்று(நவ.2) அண்ணா அறிவாலயம் வந்தார்.  தீர்மானத்தில் கையெழுத்திட்ட பின்னர் அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தற்போது தமிழ்நாட்டின் ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, அரசி யல் சாசனத்திற்கு எதிராக நிறை வேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி  வைப்பதற்கு அதிகாரம் கிடையாது. எனவே இவரை குடியரசுத் தலைவர்  திரும்பப் பெற வேண்டும். இதற்காகத் தான் தமிழகத்தைச் சேர்ந்த 57 எம்.பிக்கள்  கையெழுத்திட்டு குடியரசுத் தலை வருக்கு நாங்கள் கோரிக்கை மனு அனுப்புகிறோம்” என்றார்.

ஆவின் டிலைட் அறிமுகம்

சென்னை ,நவ.2- மூன்று மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் டிலைட் எனும் பசும் பாலை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய வடிவத்தில் 500மி.லி. பாக்கெட்டுகளில் தயார் செய்யப்பட்டுள்ளது. தினசரி ஒரு லட்சம் லிட்டர் வரை பேக் செய்யும் திறன் கொண்ட சென்னை சோழிங்கநல்லூர் பால்பண்ணையில் பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய வடிவத்தில் 500 மில்லி பாக்கெட்டுகளில் மீண்டும் தயார் செய்து  அதிகபட்ச சில்லரை விலை ரூ. 30க்கு வெளியிடப்பட்டுள்ளது.  ஆவின் டிலைட் 3.5 விழுக்காடு கொழுப்பு மற்றும் 8.5 விழுக்காடு இதர சத்துக்கள் (எஸ்.என்.எப்) கொண்ட பால்  ஆகும்.  இந்த பாலினை 90 நாட்கள் வரை  எவ்வித குளிர்சாதன வசதியின்றி வைத்து  பயன்படுத்தலாம்.

பரந்தூர் விமான நிலையத்தால் வளர்ச்சியடையும் விமான நிலையங்கள்

சென்னை, நவ.2- பரந்தூர் விமான நிலையத்தின் வருகையால் கோவை, திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பிற விமான நிலையங்களும் வளர்ச்சி அடையும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம்  தென்னரசு கூறியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேசினார். அப்போது, “இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக சென்னையைவிட்டு வெளியே சென்றால், காஞ்சிபுரம், திருவள்ளூர் இரண்டு மாவட்டங்களும் ஏரி மாவட்டங்கள். அனைத்தும் விவசாய நிலங்கள்தான். இந்த விளை நிலங்களைத்தான், பார்க்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது”என்றார். தற்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தைச் சுற்றி யுள்ள இடங்களை பார்த்தபோது, ஒருபக்கம் கல்பாக்கம் அனல்மின் நிலையம் உள்ளது. இன்னொருபக்கம் தாம்பரம் விமானப் படைத்தளம் உள்ளது.  பரந்தூரிலும் சவால்கள் உள்ளன. நீர்நிலைகள் உள்ளன. இருந்தாலும், தமிழக முதல்வர் கூறுவதுபோல, ஒருபுறம் பொருளாதார வளர்ச்சி தேவை, அதேநேரம் அங்கு வசிக்கும் மக்களை யும் விட்டுவிட முடியாது. எனவே அவர்களின் வாழ்வாதாரம்  பாதிக்காத வகையில், சிறந்த எதிர்காலத்தை அளிக்கின்ற  வகையில்தான் அமையவுள்ளது. எனவே அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர்களுடனும் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். பரந்தூர் விமான நிலையம் மட்டும் வரப்போவதில்லை. கோவை, திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படவுள்ளன. தமிழக அரசு சார்பில் இதற்காக 80 முதல் 85 விழுக்காடு வரை நிலம்  கையகப்படுத்தி கொடுக்கப் பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையத்தின் வருகையால் தமிழகத்தில் உள்ள மற்ற விமான  நிலையங்களும் வளர்ச்சி அடையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

முரண்டு பிடிக்கிறார் போல்சானாரோ

பிரேசிலியா, நவ.2- பிரேசிலின் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான இரண்டாவது சுற்றில் 1.8 விழுக்காடு வாக்கு கள் வித்தியாசத்தில் தோல்வி யுற்றாலும், இதுவரையில் அந்தத் தோல்வியை வெளிப் படையாக ஒப்புக்கொள்ளா மல் போல்சானாரோ முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார். சாலையில் கலகம் என்ற பெயரில் போல்சானாரோவின் ஆதரவாளர்கள் சரக்கு வாக னங்களை ஆங்காங்கே நிறுத்தி போக்குவரத்தை நிலைகுலையச் செய்துள்ள னர். ‘‘கம்யூனிசத்தின் வெற்றி யைத் தாங்கள் அனுமதிக்க முடியாது’’ என்று முழக்கமிட்ட வாறு அவர்கள் சாலைகளை மறித்துள்ளனர். லூலாவின் வெற்றியைத் தட்டிப் பறிக்கும் வகையில், பிரேசில் ராணுவம் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் கூப்பாடு போட்டு வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் வெளி யானபோது டொனால்டு டிரம்ப் எத்தகைய முயற்சிகளைக் கையாண்டாரோ, அதே  மாதிரிதான் போல்சானாரோ வும் நடந்து கொள்ள முயற்சிக் கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தேர்தல் முடிவுகள் வெளி யாகி நாட்கள் கடந்த பிறகும்,  எதுவும் பேசாமல் அமைதி யாக இருக்கிறார். தனது வீட்டை விட்டு வெளியிலும் வர வில்லை. கடைசியாக, வாக்குச் சாவடிக்கு வந்தபோதுதான் அவரைப் பார்க்க முடிந்தது. கடந்த சில நாட்களாக  தனது சமூக வலைத்தளக் கணக்குகள் எதையுமே போல்சானாரோ இயக்க வில்லை. எந்தப் பதிவுகளும் அவரால் போடப்படவில்லை. அவரது ஆதரவாளர்கள் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்க முனைகையில், அரசியல்சட்டத்தை மீறி எதையும் செய்யமாட்டோம் என்ற ஒற்றை வரியோடு முடித்துக் கொண்டிருக்கிறார். அவரது ஆதரவாளர்களை சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றெல்லாம் கோரிக்கைகள் எதையும் வைக்கவில்லை.