கொல்லம், டிச.11- பரவூரைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் தலைவர் வீட்டில் பணம் அபகரிப்பதாகக் கூறி பாஜக பிரமுகரான இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். கொல்லம் மாவட்டம் பூதகுளம் நிதி வங்கியின் ஆட்சிக்குழு உறுப்பினரும் ஆர்.எஸ்.எஸ்.காரருமான பூத குளம் செகந்தழிகம் அனூப். இவரது வீட்டில் கலைக் கோட்டைச் சேர்ந்த பெண் சனியன்று பிற்பகல் தற் கொலைக்கு முயன்றார். அந்த பெண் சனியன்று காலை பத்து மணிக்கு அனூப் வீட்டிற்கு வந்துள்ளார். தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு அனூப்பிடம் கேட்டபோது, தர மறுத்துவிட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு அனூப் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர், அனூப் வீட்டின் படுக்கையறையில் அந்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். சம்பவத்தின்போது வீட்டில் அனூப்பின் சகோதரி இருந்துள்ளார். இளம் பெண் காணாமல் போனதும், அவர் அறையைக்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது தூக்கில் தொங்கியதை பார்த்தார். பின்னர், அப்பகுதி மக்கள் உதவியுடன் கதவை உடைத்து அந்த பெண்ணை மீட்டனர். அவருக்கு கொல்லம் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.