states

ஆளுநர் குறித்து பேச அனுமதி மறுப்பதா?

சென்னை, ஜன. 21 - பீகார் தலைநகர் பாட்னாவில் சட்டப் பேரவை தலைவர்கள் (சபாநாய கர்கள்) மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தலைமை தாங்கினார். இதில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, துணைத் தலைவர் கு. பிச்சாண்டி ஆகியோர் பங்கேற்றனர். அப்பாவு பேசியபோது, தமிழ கத்தில் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தார்.  தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் கவலை அளிக்கின்றன. அவர் அர சியலமைப்புச் சட்ட விதிகளை கேலிக்கூத்து ஆக்கி வருகிறார். தமிழக மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் தொடர்ந்து அவமதிக்கிறார். எதிர்க் கட்சிகள் ஆளும் ஏனைய மாநி லங்களிலும் ஆளுநர்களால் இது போன்ற செயல்கள் நடக்கின்றன. ஆரோக்கியமான ஜனநாயகம் செழிக்க இந்திய அரசமைப்புச் சட்டத்தை பொருத்தமான முறை யில் திருத்துவதற்கான எனது கருத்துகளை இந்த மாநாடு அங்கீ கரிக்க வேண்டும். ஒன்றிய - மாநில அர சுகளுக்கு இடையே ஒரு பாலமாக செயல்படுவதற்கு பதில் ஆளுநர்கள் தங்களது அரசமைப்பு கடமைகளை நிறைவேற்றவில்லை. இந்த காரணத்துக்காக ஆளுந ரின் பங்கு குறித்து பல்வேறு ஆணையங்களின் பரிந்துரைகள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. ஆளுந ரின் அரசமைப்புச் சட்ட மீறல்களால், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப் பட்ட அரசாங்கம் தனது சமூக நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறது. எனவே, தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரை ‘நீக்க’ மாநில சட்ட மன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அரசியலமைப்பின் 156-வது பிரிவிலிருந்து குடியரசுத் தலை வர் ஒப்புதல் பேரில் ஆளுநர் பத வியில் இருப்பார் என்ற வார்த்தை யை நீக்க வேண்டும். இவ்வாறு அப்பாவு பேசினார். இருப்பினும், ஆளுநர் குறித்து அப்பாவு பேசிய கருத்துகளுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்  ஆட்சேபம் தெரிவித்தார். அவர் பேசி யது அவைக் குறிப்பில் பதிவு செய்யப்படாது என்று கூறினார். ஆளுநர் குறித்து கருத்து தெரி விப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மு. அப்பாவு, “இந்த மாநாட்டில் இதைப் பற்றிப் பேச முடியாவிட்டால், வேறு எங்கு பேச முடியும்?” என்று கேள்வி எழுப்பியதுடன், மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்தார்.